250 வீடுகளின் மின்சாரத்தை துண்டிக்க தடை.. நில விவகார வழக்கில் சென்னை ஹைகோர்ட் அதிரடி
கோவை சின்னயம்பாளையத்தில் உள்ள 250 வீடுகளின் மின்சாரத்தை துண்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கோயம்புத்தூர்: கோவை சின்னயம்பாளையத்தில் உள்ள 250 வீடுகளின் மின்சாரத்தை துண்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது..
கோவை மாவட்டம் சின்னயம்பாளையத்தில் உள்ள 250 வீடுகள் தன்னுடைய நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாகவும், அவர்களை அந்த நிலத்தில் அகற்ற கோரி அந்த பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் 250 வீடுகளின் மின் விநியோகத்தை துண்டிக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சின்னயம்பாளையத்தில் உள்ள செல்வராஜ், மாரிமுத்து உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் மின்சாரத்தை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சின்னயம்பாளையத்தில் உள்ள 250 வீடுகளின் மின்சாரத்தை துண்டிக்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு குறித்து பழனிசாமி, தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications