பொங்கல் விழாவை கொண்டாட.. இன்று கோவை வருகிறார் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்!
கோயம்புத்தூர்: திருப்பூரில் தனது சொந்த ஊரில், பொங்கல் விழாவை குடும்பத்துடன் கொண்டாட உள்ள குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். எனவே, இன்று அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு வருகிறார்.
அங்கிருந்து திருப்பூர் செல்லும் அவர், பிச்சம்பாளையம் மற்றும் கணக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு பொங்கல் விழாக்கள் நடைபெறுகின்றன. இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் குடும்பத்துடன் பங்கேற்கிறார். பின்னர் குல தெய்வம் கோயிலுக்கு சென்று தரிசனம் மேற்கொள்கிறார்.

பின்னர் நாளை பிற்பகல் கோவை வரும் ராதாகிருஷ்ணன், கே.எம்.சி.எச் மருத்துவமனையில் புதியதாக கட்டப்பட்ட நரம்பியல் நிறுவனம் மற்றும் புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார். இதனையடுத்து கோவை கொடிசியா மைதானத்தில் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதிலும் அவர் பங்கேற்கிறார்.












Click it and Unblock the Notifications