அவர்தான் பேசிகிட்டு இருக்கார்ல.. சீறிய அண்ணாமலை.. பற்ற வைத்த கார்த்தி சிதம்பரம்.. "இது" வேற நடந்ததா?
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் விமான நிலையத்தில் நேற்று கார்த்தி சிதம்பரம் பேட்டி அளிக்கும் போது நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று சென்னையில் இருந்து பணி நிமித்தமாக பாஜக தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் வந்தார். இதே விமானத்தில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரமும் பயணம் செய்தார்.
இதையடுத்து அண்ணாமலை கார்த்தி சிதம்பரத்துடன் செல்பி எடுத்துக்கொண்டார். இந்த செல்பி இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது.
அண்ணாமலை இதில் சிரித்தபடி போஸ் கொடுத்தார்.

விமான நிலையம்
இந்த நிலையில்தான் விமான நிலையத்தில் நடந்த வேறு ஒரு சம்பவம் இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது. விமான நிலையம் வெளியே கார்த்தி சிதம்பரம் பேட்டி கொடுத்தார். அப்போது அண்ணாமலை வந்ததும்.. வருங்கால தமிழ்நாடே வருக.. பாரத் மாதா கீ ஜே என்று பாஜகவினர் கோஷம் எழுப்பினர். இந்த சத்தத்தால் சரியாக பேட்டி கொடுக்க முடியாமல் திணறிய கார்த்தி சிதம்பரம்.. அவங்க எதோ புரியாத மொழியில் பேசுகிறார்கள் என்று கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோஷம்
தொடர்ந்து பாஜகவினர் அண்ணாமலையை வரவேற்று கோஷம் எழுப்பிக்கொண்டே இருந்தனர். இதனால் கார்த்தி சிதம்பரம் பேச முடியாமல் நிறுத்தினார். அவங்க புரியாத மொழியில் கோஷம் எழுப்பிக்கொண்டு இருக்கிறார்கள், நமக்கு என்ன என்று கூறினார். இதையடுத்து அங்கு வந்த அண்ணாமலை.. எம்பி கார்த்திதான் பேட்டி கொண்டு இருக்கிறாரே அமைதியாக இருங்கள் என்று கூறினார். ஆனால் அண்ணாமலை காட்டமாக சொல்லியும் கேட்காமல் பாஜகவினர் தொடர்ந்து கோஷம் எழுப்பினார்கள்.

கார்த்தி சிதம்பரம்
இதையடுத்து தொடர்ந்து பேசிய கார்த்தி சிதம்பரம், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஒரு விசித்திரமான நிலையில் உள்ளது. ஆளும் கட்சியோடு நாங்கள் கூட்டணி வைத்து இருக்கிறோம். ஆனால் அரசாங்கத்தில் எங்களுக்கு இடம் இல்லை. ஆனால் ஆளும் கட்சியோடு நாங்கள் ஒத்துப்போக வேண்டும். ஏனென்றால் நாங்கள் அவர்களுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம். அதன் மூலம்தான் வென்று இருக்கிறாராம்.

அரசாங்கம்
நாங்கள் அரசாங்கத்தில் இடம்பெறவில்லை. ஆளும் கட்சியில் அரசு நிர்வாகத்தில் நாங்கள் இல்லை. நாங்கள் எதிர்கட்சியாகவும் இல்லை. அதனால் நாங்கள் ஒரு நடுவில் சிக்கி இருக்கிறோம். அந்த நிலையில் இருக்கும் போது எங்களுக்கு கொஞ்சம் தர்மசங்கடமான நிலை இருக்கிறது. காமராஜர் போல ஒருவர் தோன்ற வேண்டும். அப்போதுதான் காமராஜர் ஆட்சி அமைய முடியும். அப்படி இதுவரை அமையவில்லை.

ஆட்சி
தமிழ்நாட்டில் காங்கிரஸ் மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும். மக்கள் பிரச்சனைகளை பற்றி பேச வேண்டும். எல்லா ஊரிலும் மக்கள் பிரச்சனை இருக்கும். அதை பேச வேண்டும். ஆனால் நாங்கள் கூட்டணியில் இருப்பதால் அதை பற்றி பேச முடிவது இல்லை. சுதந்திரமாக பேச முடிவது இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்.

பற்றவைத்த கார்த்தி
என்னை பொறுத்தவரை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக செயல்படுகிறார். மக்கள் வெளிப்படையாக அணுக கூடிய தலைவராக இருக்கிறார். அதனால் அவரை நான் பாராட்டுகிறேன், என்று கூறினார். அண்ணாமலையுடன் செல்பி எடுத்த கார்த்தி சிதம்பரம், தமிழ்நாட்டிலும் பிரச்சனைகள் இருக்கிறது, கூட்டணி கட்சி என்பதால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று கூறி உள்ளார். அவரின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications