ஒரு நாளைக்கான பெட்ரோல்தான் இருக்கு.. இனி 15 மணி நேர மின்வெட்டு.. தியாகத்திற்கு தயாராகுங்கள்.. ரணில்
கொழும்பு: இலங்கையில் ஒரு நாளைக்கான பெட்ரோல் மட்டுமே கையிருப்பு உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் பதவி ஏற்றார்.
இதையடுத்து ரணில் விக்கிரசிங்கே நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் கூறுகையில் இலங்கைக்கான எரிவாயு கப்பலுக்கான கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

டீசல் கப்பல்கள்
இந்திய உதவியின் கீழ் 2 டீசல் கப்பல்கள், 2 பெட்ரோல் கப்பல்கள் வர உள்ளன. இலங்கையின் பொருளாதாரம் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. எரிவாயு சிலிண்டர்களை கொள்முதல் செய்ய 20 மில்லியன் அமெரிக்க டாலர் விரைவாக திரட்டப்படும்.

வரவு செலவு திட்டம்
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும். நாட்டை காப்பாற்ற மிகப் பெரிய சவாலை ஏற்றுள்ளேன். இலங்கையில் 14 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது கவலைதருகிறது. மிக மோசமான வருவாய் இழப்பால் இலங்கை விமான துறையை தனியார் மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

45 பில்லியன் டாலர் நஷ்டம்
2021-ல் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 45 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விமானத்தில் பயணிக்காத மக்களும் கூட விமான சேவை நிறுவனத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கையில் இனிவரும் மாதங்கள் மிக மோசமானதாக இருக்கும். ஆகையால் நாட்டின் பொதுமக்கள் அனைவரும் தியாகங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும்.

உயிரை பணயம்
என் உயிரை பணயம் வைத்தே தற்போதைய சவால்களை எதிர்கொள்கிறேன். எனக்கு நேரம் கொடுங்கள். மின்சாரத் தேவையில் நான்கில் ஒன்றை உற்பத்தி செய்ய எரிபொருளே பயன்படுத்தப்படுகிறது. இதனால் தினந்தோறும் மின்வெட்டு இன்னும் சில நாட்களில் 15 மணி நேரங்களாக மாறவும் இடமுண்டு. ஆனால் நாம் இதற்கு தேவையான நிதியை தேடிக்கொண்டுள்ளோம். நான் எனது கடமையை நாட்டிற்காக செய்து முடிப்பேன். அது நான் உங்களுக்கு அளிக்கும் உறுதியாகும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications