"யார்கிட்ட கணக்கு கேட்கிற".. பண்ருட்டி கிராம சபை கூட்டத்தில் அடிதடி.. பாதியில் முடிந்ததால் பரபரப்பு!
கடலூர்: கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், வரவு செலவு கணக்கு கேட்கப்பட்டதால் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதால் கிராம சபை கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டது.

சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் காந்தி ஜெயந்தி போன்ற நாட்களில் தமிழகத்தில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, காந்தி ஜெயந்தியான இன்று, தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்த கிராம சபைக் கூட்டங்கள், காலை 11 மணிக்கு நடைபெறவேண்டும் என்றும், ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில், சுழற்சி முறையை பின்பற்றி கூட்டம் நடத்தப்படவேண்டும் எனவும் ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது.
மேலும், கிராம சபை கூட்டங்களில், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்தும், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கலாம் எனவும் அரசு சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தன. அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கிராம ஊராட்சி மன்ற தலைவர்களால் கிராம சபைக் கூட்டங்கள் இன்று கூட்டப்பட்டன. ஒரு சில இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில், மோதல் போக்கும், கைகலப்பு போன்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளன,
அந்த வகையில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், வரவு செலவு கணக்கு கேட்கப்பட்டதால் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதால் கிராம சபைக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியம் கோட்லாம்பாக்கம் ஊராட்சியில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம், திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா தலைமையில் இன்று நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலர் முருகன் முன்னிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது 2 வது வார்டு உறுப்பினர் தேமுதிக கட்சியை சேர்ந்த ஜெய்சங்கர் மற்றும் த.வா.க கட்சியைச் சேர்ந்த துணை தலைவர் வசந்தியின் கணவர் வீரமணி ஆகியோரிடையே வரவு செலவு கணக்கு கேட்பதில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டதோடு, ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதனால் கிராம சபை கூட்டத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டதால், கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications