Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலூரில் 39 வயசில் விபச்சாரம்.. கணவனுடன் சேர்ந்து மாணவிகளை? திருவண்ணாமலை தமிழரசியை கைது செய்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடந்த 2014ம் ஆண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட தம்பதி இருவரும், இப்போது சிக்கியிருக்கிறார்கள்.. இந்த வழக்கில் தொடர்புடைய ஏற்கனவே 16 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இப்போது முக்கிய குற்றவாளிகளான தம்பதி இருவருமே ஒரே நேரத்தில் சிக்கியிருப்பது பரபரப்பை தந்து வருகிறது. என்ன நடந்தது கடலூரில்?
கடந்த 2014ம் ஆண்டு நடந்த சம்பவம் இது.. கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த 13 மற்றும் 14 வயது பள்ளி மாணவிகள் திடீரென மாயமாகிவிட்டார்கள்.. இதனால், சம்பந்தப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்களும் போலீசில் புகார் தந்தனர்.

Cuddalore Prostitution Tiruvannamalai

போலீஸ் விசாரணை

இந்த புகாரின்பேரில் திட்டக்குடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.. இறுதியில், ஒரு வாரத்திற்கு பிறகு 2 சிறுமிகளும் வீடுகளுக்கு திரும்பி வந்தார்கள்.. ஆனால், 2 பேரின் உடல்நிலைமையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது..
இதைப்பார்த்து பதறிப்போன பெற்றோர் , சிறுமிகளிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போதுதான், அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை சேர்ந்த சேகர் மகன் சதீஷ்குமார்(39), இவரது மனைவி தமிழரசி(39) இருவரும், தங்களை கடத்தி சென்று, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார்கள் என்று சொல்லி கதறி அழுதனர்.

கடலூர் மகிளா கோர்ட்

திட்டக்குடி, விருத்தாசலம், வடலூர், கோலியனூர், நெய்வேலி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புரோக்கர்கள் மூலம், பாலியல் தொழிலில் தங்களை ஈடுபடுத்தியதையும் சொல்லி அழுதனர்.. இதையடுத்து சதீஷ்குமார், தமிழரசி உள்பட 22 பேர் மீது திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 2016ம் ஆண்டு இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கும் மாற்றப்பட்டது. அப்போது சிபிசிஐடி போலீசார் கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால், கடந்த 2018ல், சதீஷ்குமார், தமிழரசி இருவருமே தலைமறைவாகிவிட்டார்கள்.. எனவே, இந்த ஜோடியை தேடும் பணி தீவிரமானது. இதனிடையே, இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் கடந்த 4.1.2019ம் ஆண்டு, 16 பேருக்கு சிறை தண்டனை விதித்து கடலூர் மகிளா கோர்ட் தீர்ப்பு வழங்கியது.


தம்பதி தலைமறைவு

எனினும், இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே வழக்கில் தொடர்புடைய நம்மாழ்வார், செந்தில்குமார் ஆகியோர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்கள்.. மேலும் ஒருவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். எனவே, இதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடி வந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜெபினா(40) என்பவரை மட்டும் சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர்.

இந்த வழக்கில் அனைவருமே சிக்கிவிட்ட நிலையில், சதீஷ்குமார், தமிழரசி மட்டும் கிடைக்கவில்லை.. கடந்த 7 வருடங்கள் தலைமறைவாக இருந்த அவர்களை தேடும் பணியை மட்டும் போலீசார் கைவிடவில்லை.

திருவண்ணாமலை வீட்டு வேலை

இந்நிலையில், சதீஷ்குமார் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் தற்போது கிடைத்தது. இதையடுதது, கருமத்தம்பட்டிக்கு சென்ற சிபிசிஐடி போலீசார் அங்கு சதீஷ்குமாரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அப்போது போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், தமிழரசி திருவண்ணாமலையில் தங்கி, ஒரு வீட்டு வேலை செய்வது தெரிய வந்தது.

உடனே திருவண்ணாமலைக்கு சென்ற போலீசார், வீட்டு வேலை செய்து கொண்டிருந்த தமிழரசியை சுற்றி வளைத்து கைது செய்தது. இப்போது, தம்பதி இருவருமே கடலூர் மத்திய சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+