கடலூரில் 39 வயசில் விபச்சாரம்.. கணவனுடன் சேர்ந்து மாணவிகளை? திருவண்ணாமலை தமிழரசியை கைது செய்த போலீஸ்
கடலூர்: கடந்த 2014ம் ஆண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட தம்பதி இருவரும், இப்போது சிக்கியிருக்கிறார்கள்.. இந்த வழக்கில் தொடர்புடைய ஏற்கனவே 16 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இப்போது முக்கிய குற்றவாளிகளான தம்பதி இருவருமே ஒரே நேரத்தில் சிக்கியிருப்பது பரபரப்பை தந்து வருகிறது. என்ன நடந்தது கடலூரில்?
கடந்த 2014ம் ஆண்டு நடந்த சம்பவம் இது.. கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த 13 மற்றும் 14 வயது பள்ளி மாணவிகள் திடீரென மாயமாகிவிட்டார்கள்.. இதனால், சம்பந்தப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்களும் போலீசில் புகார் தந்தனர்.

போலீஸ் விசாரணை
இந்த புகாரின்பேரில் திட்டக்குடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.. இறுதியில், ஒரு வாரத்திற்கு பிறகு 2 சிறுமிகளும் வீடுகளுக்கு திரும்பி வந்தார்கள்.. ஆனால், 2 பேரின் உடல்நிலைமையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது..
இதைப்பார்த்து பதறிப்போன பெற்றோர் , சிறுமிகளிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போதுதான், அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை சேர்ந்த சேகர் மகன் சதீஷ்குமார்(39), இவரது மனைவி தமிழரசி(39) இருவரும், தங்களை கடத்தி சென்று, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார்கள் என்று சொல்லி கதறி அழுதனர்.
கடலூர் மகிளா கோர்ட்
திட்டக்குடி, விருத்தாசலம், வடலூர், கோலியனூர், நெய்வேலி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புரோக்கர்கள் மூலம், பாலியல் தொழிலில் தங்களை ஈடுபடுத்தியதையும் சொல்லி அழுதனர்.. இதையடுத்து சதீஷ்குமார், தமிழரசி உள்பட 22 பேர் மீது திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 2016ம் ஆண்டு இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கும் மாற்றப்பட்டது. அப்போது சிபிசிஐடி போலீசார் கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆனால், கடந்த 2018ல், சதீஷ்குமார், தமிழரசி இருவருமே தலைமறைவாகிவிட்டார்கள்.. எனவே, இந்த ஜோடியை தேடும் பணி தீவிரமானது. இதனிடையே, இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் கடந்த 4.1.2019ம் ஆண்டு, 16 பேருக்கு சிறை தண்டனை விதித்து கடலூர் மகிளா கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
தம்பதி தலைமறைவு
எனினும், இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே வழக்கில் தொடர்புடைய நம்மாழ்வார், செந்தில்குமார் ஆகியோர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்கள்.. மேலும் ஒருவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். எனவே, இதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடி வந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜெபினா(40) என்பவரை மட்டும் சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்த வழக்கில் அனைவருமே சிக்கிவிட்ட நிலையில், சதீஷ்குமார், தமிழரசி மட்டும் கிடைக்கவில்லை.. கடந்த 7 வருடங்கள் தலைமறைவாக இருந்த அவர்களை தேடும் பணியை மட்டும் போலீசார் கைவிடவில்லை.
திருவண்ணாமலை வீட்டு வேலை
இந்நிலையில், சதீஷ்குமார் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் தற்போது கிடைத்தது. இதையடுதது, கருமத்தம்பட்டிக்கு சென்ற சிபிசிஐடி போலீசார் அங்கு சதீஷ்குமாரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அப்போது போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், தமிழரசி திருவண்ணாமலையில் தங்கி, ஒரு வீட்டு வேலை செய்வது தெரிய வந்தது.
உடனே திருவண்ணாமலைக்கு சென்ற போலீசார், வீட்டு வேலை செய்து கொண்டிருந்த தமிழரசியை சுற்றி வளைத்து கைது செய்தது. இப்போது, தம்பதி இருவருமே கடலூர் மத்திய சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications