கடலூரில் மேஸ்திரி என்ன கேட்டாரு தெரியுமா? அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில்? 300 மூட்டைக்கு? ஓமை காட்
கடலூர்: சேத்தியாத்தோப்பு அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய மேஸ்திரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
தமிழக அரசின் துறைகளில், ஏராளமான பணம் புழங்கக்கூடிய துறையாக பத்திரப்பதிவு, வருவாய்த்துறை துறை விளங்குகிறது.. எனவேதான் இந்த துறையில் லஞ்ச புகார்கள், அதையொட்டிய கைது நடவடிக்கைகளும் பெருகி வருகின்றன.

இருக்கின்ற துறைகளிலேயே வருவாய்த்துறையில்தான் அதிகமான லஞ்சம் நிறைந்திருப்பதாக, புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது.. அதேபோல, மின்துறையிலும் லஞ்ச ஊழல்கள் பெருகி கொண்டிருக்கிறது.
புதிய மின் இணைப்பு
2 நாட்களுக்கு முன்புகூட கிருஷ்ணகிரியில் ஒருவர் சிக்கினார். அஞ்செட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், ஓசூர் பேகேப்பள்ளி பிருந்தாவன் கார்டன் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார்.. தன்னுடைய புது வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு, சிப்காட் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.. அதை பரிசீலனை செய்த, மின்வாரிய உதவி பொறியாளர் சிவகுரு, கமர்சியல் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் இருவரும், புதிய மின்இணைப்பு வழங்க, 35,000 ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும் என்று கேட்டார்களாம்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ராஜேந்திரன் புகார் சொன்னதையடுத்து, சம்பந்தப்பட்ட இருவரையுமே போலீஸ் கைது செய்திருந்தது.. இப்போது நெல் மூட்டை விற்பனை செய்பவரிடம்கூட லஞ்சம் கேட்டுள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது.
நெல் மூட்டை
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது தரசூர் கிராமம்.. இங்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில், அதேபகுதியைச் சேர்ந்த குலோத்துங்கள் என்பவர், தன்னுடைய 300 நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக எடுத்து சென்றிருக்கிறார்..
அப்போது, மேஸ்திரியாக பணிபுரியும் 39 வயதுடைய வேல்மணி, ஒரு மூட்டைக்கு ரூ.55 வீதம் 300 மூட்டைக்கு ரூ.16,500 கொடுத்தால் தான் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்று, குலோத்தங்கனிடம் கூறினாராம்.. இதைக்கேட்டு அதிர்ந்த குலோத்துங்கன், பாடுபட்டு உழைத்த நெல் மூட்டைகளுக்கு, எதற்காக லஞ்சம் தர வேண்டும்? என்று தயங்கினார். மேலும் லஞ்சம் தர விரும்பாலும், இதுகுறித்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடமும் புகார் அளித்தார்.

சுற்றி வளைத்த போலீஸ்
பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் அறிவுறுத்தல்படி, நேரடி கொள்முதல் நிலையம் சென்ற குலோத்துங்கன் ரூ.16,500-ஐ மேஸ்திரி வேல்மணியிடம் தந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு கடலூர் டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீஸார், மேஸ்திரி வேல்மணியை, சுற்றி வளைத்து பிடித்தனர்..
அவரிடம் விசாரணை நடத்தியபோது, நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக, அந்த லஞ்சப்பணத்தை வாங்கியதாக கூறினார்.. இதையடுத்து மேஸ்திரி வேல்மணியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications