Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் - பெ.மணியரசன்

சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் தமிழ்தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்த தஞ்சை மணியரசன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று தமிழ்தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்த தஞ்சை மணியரசன் கூறியுள்ளார். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள தீட்சிதர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Recommended Video

    சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் - பெ.மணியரசன்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிற்றம்பல மேடையில் யாரும் ஏறக்கூடாது என கோயில் தீட்சிதர்கள் தடை விதித்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் மற்றும் சமூக, தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடி வழிபட இன்று முதல் 5ஆம் தேதி வரை ஆறு நாள் அணிவகுப்போம் என தெய்வத் தமிழ்ப் பேரவை அமைப்பினர் அறிவித்து இருந்தனர். இதற்கு போலீசார் தடை விதித்திருந்தனர்.

     போராட்டம்

    போராட்டம்

    இந்நிலையில் இன்று காலை கோயில் எதிரே உள்ள தேரடி தெருவில் தெய்வத்தமிழ் பேரவை அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடராஜர் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று சிற்றம்பல மேடையில் ஏறி தமிழில் தேவாரம் திருவாசகம் பாட வந்தனர். குச்சனூர் சித்தர் பீட ராஜயோக வடகுரு மடாதிபதி அருள்திரு குச்சனூர் கிழார் தலைமையில் வந்த தெய்வத் தமிழ் பேரவை அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    தேவாரம் பாடியவர்கள் கைது

    தேவாரம் பாடியவர்கள் கைது

    அவர்களுடன் தமிழ்தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்த தஞ்சை மணியரசன், வெங்கட்ராமன், குபேரன் உள்ளிட்டோர் வந்தனர். இதையடுத்து அவர்கள் கோயில் எதிரே சாலை ஒரத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாத்தியக் கருவியை இசைத்தபடி தேவாரம் பாடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 60 பேரை சிதம்பரம் நகர போலீசார் கைது செய்தனர்.

    குண்டு கட்டாக வெளியேற்றம்

    குண்டு கட்டாக வெளியேற்றம்

    அதில் சிலர் வாகனத்தில் ஏற மறுத்து கண்டன முழக்கங்களை எழுப்பியதால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். அப்போது வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலை மையமாக வைத்து ஒவ்வொரு அமைப்பினரும் பல்வேறு போராட்டங்கள் அறிவித்துள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க சிதம்பரம் பகுதியில் இன்று கடலூர் மாவட் கூடுதல் எஸ்பி அசோக்குமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தீட்சிதர்களுக்கு சொந்தமா?

    தீட்சிதர்களுக்கு சொந்தமா?

    கைதுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குச்சனூர் சித்தர் பீடாதிபதி குச்சனூர் கிழார், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல. சில கோயில்களில் பிரச்சினை ஏற்பட்டால் அறநிலையத்துறை கோயிலை ஏற்றுக்கொள்கிறது. அதுபோல் சிதம்பரம் நடராஜர் கோயிலையும் அறநிலையத்துறை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    நடவடிக்கை தேவை

    நடவடிக்கை தேவை

    கோயிலுக்கு வந்த ஒரு பெண் பக்தரை தீட்சிதர்கள் சாதிப்பெயரை சொல்லி திட்டி வெளியேற்றி உள்ளனர். காவல்துறை வழக்குப் பதிவு செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும். கோயில்களில் உயர்வு, தாழ்வு இன்றி அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். கோயில்களில் சமத்துவம் நிலை நாட்டவும், தமிழ் ஒலிக்கவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    தேவாரம் பாட அனுமதி மறுப்பதா?

    தேவாரம் பாட அனுமதி மறுப்பதா?

    இந்தப் போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் தேசியப் பேரியக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தஞ்சை மணியரசன்,நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாடுவது தமிழர்களின் வழக்கம். அதை தீட்சிதர்கள் தடை செய்கின்றனர். ஏற்கெனவே தேவாரம் பாடிய ஆறுமுகசாமியை அடித்து காயப்படுத்தினர். தேவாரம் பாடலாம் என அரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனாவை காரணம் காட்டி அனுமதி மறுத்த தீட்சிதர்கள், கொரோனா குறைந்த பிறகும் கோயில் சிற்றம்பல மேடையில் ஏறக் கூடாது என தடை செய்கின்றனர். கோயிலுக்கு வழிபடச் சென்ற தாழ்த்தப்பட்ட பெண்ணை விரட்டி அடித்திருக்கிறார்கள்.

    இந்து சமய அறநிலையத்துறை வசம்

    இந்து சமய அறநிலையத்துறை வசம்

    சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் பாடுவதை தமிழக அரசு முன்னின்று நடத்த வேண்டும். ஆனால் அதற்காக போராட்டம் நடத்துபவர்களை கைது செய்கிறார்கள். சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் தமிழக அரசு கொண்டு வர வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள தீட்சிதர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+