'யானை புக்க புலம் போல' பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மொத்தமாக விற்கும் மத்திய அரசு!
டெல்லி: பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் யானை புக்க புலம் போல என்கிற புறநானூற்று பாடலை மேற்கொள்காட்டி பேசினார். அந்த புறநானூற்றுப் பாடல் வரிகளில் வரும் 'யானை புக்க புலம் போல' என்பதற்கு உதாரணமாக தேசத்தின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று ரூ1.05 லட்சம் கோடி நிதி திரட்டப் போகிறதாம் மத்திய அரசு.
லோக்சபாவில் மத்திய பட்ஜெட்டை இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது வரி வசூலிப்பது குறித்த புறநானூற்றுப் பாடல் வரிகளை அவர் மேற்கோள் காட்டினார்.

சங்க காலப் புலவரான பிசிராந்தையார், அதிக வரி வசூலித்த பாண்டிய மன்னன் அறிவுடை நம்பிக்கு அறிவுறுத்தும் பாடல் வரிகளைத்தான் நிர்மலா சீதாராமன் சுட்டிக் காட்டி பேசினார். இதற்காக லோக்சபாவில் பலத்த கைதட்டலும் நிர்மலா சீதாராமனுக்கு கிடைத்தது.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட்டின் அம்சங்களைப் பார்க்கும் போது அவர் சுட்டிக்காட்டிய புறநானூற்றுப் பாடல் வரியில் இடம்பெற்றுள்ள 'யானை புக்க புலம் போல' என்கிற வரிகள் அவருக்கே பொருந்தத்தான் செய்கிறது. அதாவது அதிக வரி வசூலித்தால் யானை தானே புகுந்து உண்ணும் நிலம் போல அரசனும் அவன் நாடும் அழியும் என்பதுதான் இந்த பாடலின் சாரம்சம்.
தற்போதைய பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை ரூ1.05 லட்சம் கோடிக்கு விற்று நிதி திரட்டப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பு அதிகமாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஊடகம், இன்சூரன்ஸ், விமானத்துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் இரும்பாலையின் பங்குகளை விற்பனை செய்ய ஏற்கனவே டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தில் எரிமலையாக வெடித்து கொண்டிருக்கிறது.
தற்போது யானை புக்க புலம் போல, ஒட்டுமொத்த பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்து ரூ1.05 லட்சம் கோடி நிதி திரட்டுவதாக அறிவித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன். இதன் மூலம் சேலம் இரும்பாலையில் பணியாற்றும் 2,500 பணியாளர்கள் உட்பட பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் லட்சக்கணக்கானோரின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி இருக்கிறார் நிர்மலா சீதாராமன் என்பது தொழிற்சங்கத்தினரின் குற்றச்சாட்டு.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications