நிதிஷ் கட்சி எம்எல்ஏக்களை தூக்கிய பாஜக: 2024 தேர்தலில் இருக்கு ட்விஸ்ட்.. சவால் விடுத்த ஜேடியூ
புதுடெல்லி: மணிப்பூரில் நிதிஷ் கட்சியின் 6-இல் 5 எம்எல்ஏக்களை பாஜக கொத்தாக தூக்கிய நிலையில், பாஜகவுக்கும் ஜேடியூ கட்சிக்கும் இடையே காரசார வார்த்தை யுத்தம் நடந்து வருகிறது.
மணிப்பூரில் நிதிஷ் கட்சியின் எம்.எல்.ஏக்களை கொத்தாக தூக்கிய பாஜக... 2024- தேர்தலில் காத்திருக்கு ட்விஸ்ட்.. சவால் விடுத்த ஜேடியூ
பீகாரில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி 75 இடங்களையும் பாஜக 74 இடங்களிலும் வென்று இருந்தது.
நிதிஷ் குமாரின் ஜேடியு 43 இடங்களை மட்டுமே பெற்றது. ஆனால் பாஜக நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவியை வழங்கியது.

பாஜக நிதிஷ் மோதல்
பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி புரிந்த நிதிஷ் குமாருக்கு பாஜக மீது ஆரம்பத்தில் இருந்தே அதிருப்தி இருந்து வந்தது. இந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகி தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடியுடன் கூட்டணி வைத்து மீண்டும் பீகாரின் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றார். பல மாநிலங்களில் பாஜக மேற்கொண்ட இந்த வித்தையை நிதிஷ் குமார் பீகாரில் அரங்கேற்றினார். இதனால் அப்செட்டான பாஜக நிதிஷ் குமாரை குறை கூறி வந்தது.

நிதிஷ் குமாருக்கு பதிலடி
இந்நிலையில், பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்படு சில வாரங்களே ஆகும் நிலையில், நிதிஷ் குமாருக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இருக்கும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சி எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்துள்ளது பாஜக. அங்கு நிதிஷ்குமார் கட்சியில் இருந்த 6 எம்.எல்.ஏக்களில் 5 பேர் பாஜகவில் இணைந்து உள்ளனர். பீகாரில் பாஜக உடனான கூட்டணியை முறித்த சில வாரங்களிலேயே இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது
மணிப்பூரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்த எம்.எல்.ஏக்கள் 6 பேரில் ஐந்து பேர் கூண்டோடு பாஜகவில் இணைந்தது நிதிஷ் குமார் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை இந்த விவகாரம் ஏற்படுத்திய நிலையில், ட்விட்டரில் பாஜகவும் ஐக்கிய ஜனதா தள கட்சியும் வார்த்தை யுத்தத்தில் ஈடுபட்டனர்.

பீகாரிலும் காலி செய்யப்படும்
பீகார் முன்னாள் துணை முதல்வரும் அம்மாநில பாஜக தலைவருமான சுஷில் மோடி தனது ட்விட் பதிவில், ''அருணாசல பிரதேசத்தை தொடர்ந்து மணிப்பூரிலும் ஐக்கிய ஜனதா தளம் துடைத்தெறியப்பட்டுள்ளது. விரைவில் பீகாரிலும் லாலு கட்சியால் ஐக்கிய ஜனதா தளம் விரைவில் காலி செய்யப்படும்'' என்று பதிவிட்டு இருந்தார்.

பகல் கனவு காணவேண்டாம்
இதற்கு பதிலடிக்கு கொடுத்துள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரும் நிதிஷ் குமாருக்கு நெருக்கமானவருமான ராஜீவ் ரஞ்சன் சிங் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி பகல் கனவில் இருக்க வேண்டாம். 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக துடைத்தெறியப்படும். அருணாசல பிரதேசத்தில் கூட்டணி தர்மத்தை பாஜக பின்பற்றவில்ல. அருணாசல பிரதேசம் மணிப்பூர் ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜகவை வீழ்த்தியே ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது என்பது நினைவில் இருக்கட்டும். எனவே ஐக்கிய ஜனதா தளத்தை விடுவித்து விடலாம் என்று பகல் கனவு காணவேண்டாம்'' என்று பதிவிட்டுள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications