லாக்டவுனால் 4 மாநிலங்களில் 22% பேருக்கு வேலை பறிபோனது.. ஆண்களுக்கே அதிக இழப்பு.. ஆய்வில் தகவல்
டெல்லி: வட இந்தியாவின் 4 மாநிலங்களில், லாக்டவுனால், 22 சதவீத தொழிலாளர்கள் வேலை இழந்ததாகவும், 31 சதவீதம் பேர் பகுதி வேலையின்மையை எதிர்கொண்டதாகவும் ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் யுனிவர்சிட்டி பிசினஸ் ஸ்கூலின் (யுபிஎஸ்) வணிக மற்றும் பொருளாதார கொள்கை ஆராய்ச்சி குறித்த குழு பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்பில் லாக்டவுனின் தாக்கங்களை பதிவு செய்ய ஆன்லைன் கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளது.

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழக வணிகப் பள்ளியைச் சேர்ந்த குல்விந்தர் சிங் மற்றும் குன்மலா சூரி மற்றும் பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிர்வைர் சிங் ஆகிய மூன்று நிபுணர்கள் அடங்கிய குழு இந்த ஆய்வை நடத்தியது.
510 பதில்கள் பெறப்பட்டன. அந்த பகுப்பாய்வின் அடிப்படையில், மேலே குறிப்பிட்ட மாநிலங்களில் லாக்டவுன் 1.0 காலத்தில், வேலைவாய்ப்பின்மை பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
லாக்டவுன் காரணமாக, 22 சதவீத தொழிலாளர்கள் வேலை இழந்தனர், 31 சதவீதம் பேர் பகுதி வேலையின்மையை எதிர்கொள்ள நேரிட்டது, அதாவது அவர்கள் தொழில்களை விட்டு வெளியேற நேரிட்டது அல்லது ஒரு வேலையிலிருந்து வருமானத்தின் சரிவை சந்தித்திருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த பகுப்பாய்வில், கணக்கெடுக்கப்பட்ட மாநிலங்களில் நாடு தழுவிய லாக்டவுன் காலகட்டத்தில், 54 சதவீத தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முறைசாரா துறையில் அதிக தாக்கத்தை எடுத்துள்ளது. முறைசாரா துறையில் 80 சதவீத தொழிலாளர்கள் முழுமையான வேலையின்மையை எதிர்கொண்டனர்.
19 சதவீதம் அளவுக்கு நகர்ப்புறங்களில் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும், 30 சதவீத அளவுக்கு கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நகர்ப்புறங்களில் பகுதி வேலையின்மை மிக அதிகமாக உள்ளது (32 சதவீதம்).
முறைசாரா துறையே வேலை இழப்புக்களால் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என்று குல்விந்தர் சிங் கூறுகிறார். கவலைக்குரிய மற்றொரு விஷயம் என்னவென்றால், விவசாயிகள் மிக உயர்ந்த பகுதி வேலையின்மையை (38 சதவீதம்) எதிர்கொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து சுயதொழில் செய்வோர் உள்ளனர்.
அரசுத் துறை 5 சதவீத தொழிலாளர்களின் வேலையின்மையை சந்தித்துள்ளது. வயது அதிகமுள்ள தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது இளம் வயது தொழிலாளர்கள் அதிகமாக, வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். முழு மற்றும் பகுதி வேலையின்மை ஆண் தொழிலாளர்களிடையே பெண்களை விட அதிகமாக உள்ளது. இவ்வாறு அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications