கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலுக்கு பிறகு.. 43% இந்தியர்கள் சீன பொருட்களை சீண்டவில்லை.. வெளியான சர்வே
டெல்லி: கிழக்கு லடாக் பகுதியில், கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.
சீனா அத்துமீறி ஆக்கிரமிக்க முயன்றபோது இந்திய வீரர்கள் தடுத்து தங்கள் இன்னுயிரை இந்த நாட்டுக்காக ஈந்த தியாக தினம் இன்று.
இதையடுத்து டெல்லியில் உயிரிழந்த ஜவான்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

43 சதவீதம் இந்தியர்கள்
இதனிடையே இந்த தாக்குதலை அடுத்து கடந்த ஓராண்டில் சீன பொருட்கள் எதையும் வாங்கவில்லை என்று 43 சதவீதம் இந்தியர்கள் ஒரு சர்வேயில் தெரிவித்துள்ளனர். லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற கம்யூனிட்டி சமூக வலைத்தளத்தில் இதுபோல ஒரு சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அதில் கருத்து கூறிய 43% இந்தியர்கள் இந்த ஒரு வருடத்தில் சீன நாட்டுப் பொருட்கள் எதையும் வாங்காமல் புறக்கணித்து உள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

ஒன்றிரெண்டு பொருட்கள்
எஞ்சிய சதவீத மக்கள் சீனாவில் உற்பத்தியான பொருட்களை வேறு வழியில்லாமல் ஒன்று அல்லது இரண்டு என்ற அளவில் மட்டும் வாங்கியுள்ளோம் மற்றபடி பெரும்பாலும் தவிர்த்து விடுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

டிக் டாக் உட்பட பல ஆப்கள் தடை
கல்வான் பள்ளத்தாக்கு அத்துமீறலுக்கு பிறகு டிக்டாக் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சீன நாட்டு சமூக வலைத்தள நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு இந்திய அரசு தடைவிதித்தது. செல்போன் செயலிகள் பல இயங்க முடியவில்லை. உள்ளூர் உற்பத்திக்கு முக்கியத்துவம் தரப்பட்டது, இந்திய மக்களில் கணிசமானவர்கள் கல்வான் பள்ளத்தாக்கு பிரச்சனைக்கு பிறகு சீன பொருட்களை வாங்கக் கூடாது என்று சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்தனர்.

பிரச்சாரங்கள்
ஆன்லைன் விற்பனை நிறுவனங்களில் சீனப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் அங்கே பின்னூட்டம் பகுதிக்குச் சென்று அந்த பொருட்கள் தரமற்றவை என்று கருத்துக்களை தெரிவித்து பிரச்சாரம் செய்தனர். ஸ்டார் மதிப்புகளை குறைத்தனர்.

சீன பொருள் வேண்டாம்
இது போன்ற நடவடிக்கைகளின் விளைவாக சீன பொருட்கள் மீது இந்தியர்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளதை இந்த சர்வே எதிரொலிக்கிறது. சுமார் 18 ஆயிரம் பேரிடம் 281 மாவட்டங்களில் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளதாக லோக்கல் சர்க்கிள்ஸ் தெரிவித்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications