செப். 12 முதல்.. நாடு முழுக்க கூடுதலாக 80 ரயில்கள் இயக்கப்படும்.. ரயில்வே வாரியம் அறிவிப்பு
டெல்லி: செப்டம்பர் 12ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கூடுதலாக 80 ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுக்க கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் போடப்பட்டது. இதன் காரணமாக ரயில்வே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து ஜூன் மாதத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவில் ரயில்வே போக்குவரத்து தொடங்கப்பட்டது.

வெளிமாநிலங்களில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல கொஞ்சம் கொஞ்சமாக ரயில்வே போக்குவரத்து தொடங்கப்பட்டது.தற்போது நாடு முழுக்க 230 ரயில்கள் இயங்கிக் கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கூடுதலாக 80 ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.
அதோடு சொந்த ஊருக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் தற்போது மீண்டும் தங்கள் பணியிடங்களை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் தற்போது வரை இயக்கப்பட்டு வந்த திசைக்கு எதிர் திசையில் ரயில்களை இயக்க உள்ளனர். அதாவது சிறுநகரங்களில் இருந்து பெரு நகரங்களை நோக்கி ரயில்களை இயக்க தொடங்கி உள்ளனர்.
தற்போது இயங்கும் 230 ரயில்களில் மிக குறைவான கூட்டம் செல்லும் ரயில்கள் நிறுத்தப்படும். தற்போது இருக்கும் பெரும்பாலான ரயில்களில் கூட்டம் 75% இருந்து 80-85% ஆக அதிகரித்துள்ளது. மக்கள் வேறு மாநிலங்களை அதிகம் பயணம் செய்ய தொடங்கி உள்ளனர் என்பதை இது காட்டுகிறது.
செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் முதல் கூடுதலாக 80 ரயில்கள் இயக்கப்படும். அதன்பின் கூட்டத்தை பொறுத்து மேலும் ரயில்கள் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications