இதுக்கு பேர்தான் தன்னம்பிக்கை! இந்த நாளை இனிதாக்க வேண்டுமா? இந்த "சூப்பர் வுமனை" பற்றி படியுங்கள்!
டெல்லி: டெல்லியில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் சக்கர நாற்காலியில் சென்று உணவு விநியோகம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உழைத்தால்தான் அடுத்தடுத்த நாளுக்கான உணவு தேவை பூர்த்தியாகும் என்கிற நிலையில், சக்கர நாற்காலியில் சென்று உணவு விநியோகித்து அதன் மூலம் வருமானம் ஈட்டும் இந்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தொடர் போராட்டங்கள்தான் வாழ்வின் அடுத்த நிலைக்கு தன்னை கொண்டு செல்லும் என்பதை இந்த பெண் உணர்ந்துள்ளார் என இந்த வீடியோ குறித்து சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வீடியோ
"வாழ்க்கை என்பது அவ்வளவு சாதாரணமானதல்ல. அது பழுத்து விழும் பழமல்ல. அதை நாம்தான் அடித்து வீழ்த்த வேண்டும். இந்த முயற்சியில் நாம் முன்னேறிக்கொண்டே இருப்பதுதான் முக்கியமானது" என்கிற கருத்துக்கு ஏற்ப டெல்லியில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் சக்கர நாற்காலியில் சென்று உணவு விநியோகம் செய்து வருமானம் ஈட்டி வருகிறார். இது தொடர்பான வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது.

உணவு டெலிவரி
டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். பொதுவாக இதுபோல உணவு விநியோகத்தில் நாளொன்றுக்கு ரூ.500 கிடைப்பது பெரிய விஷயம். ஆனால் இதற்கான உழைப்பு என்பது அந்த தொகையை விட அதிகமானதுதான். குறிப்பிட்ட நேரத்தில் உணவை பெற்றுக்கொள்வதில் தொடங்கும் இந்த பணி, அதை பத்திரமாக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்த்த பின்னர்தான் முடிவடைகிறது.

வளர்ச்சி?
இந்நிலையில், இந்த வேலையில் தொடக்கத்தில் ஆண்கள்தான் அதிகம் ஈடுபட்டு வந்தனர். ஆனால் பொருளாதார தேவையையடுத்து பெண்களும் பலர் இதில் இணைந்து பணியாற்ற தொடங்கினர். சிலர் தங்கள் குழந்தைகளை தன்னுடனே உணவு டெலிவரிக்கு கொண்டு செல்வார்கள். அந்த அளவு பொருளாதார தேவை மக்களுக்கு இருக்கிறது. கொரோனா தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து நாம் மீண்டு வந்துவிட்டோம் என்று சொல்லிக்கொண்டாலும் இது போன்ற வீடியோக்கள் இந்த வளர்ச்சி மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

யாருக்கான வளர்ச்சி?
குறிப்பாக, கடந்த 2021-2022ன் முதல் காலாண்டில் இந்தியா 20.1% பொருளாதார வளர்ச்சியை கொண்டிருந்தது. ஆனால் நடப்பாண்டில் இது 13.5%ஆக சுருங்கிவிட்டது. இந்த 13.5 சதவிகித வளர்ச்சியை வேறெந்த உலக நாடுகளும் எட்டவில்லை என்று சொல்லப்படும் நிலையில் இந்த வளர்ச்சி சாமானிய மக்களின் வாழ்வாதாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பதே முக்கிய கேள்வியென சமூக ஆர்வலர்களும், பொருளாதார அறிஞர்களும் கேட்டு வருகின்றனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications