செஞ்சிலுவை சங்கத்திடம் அபிநந்தன் ஒப்படைக்கப்படவில்லை.. விடுதலை நடைமுறை எப்படி நடந்தது?
Recommended Video

டெல்லி: விங் கமாண்டர் அபிநந்தன், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக ஒப்படைக்கப்படாமல், இந்திய எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதற்கான, காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அபிநந்தன் இன்று ராவல்பிண்டியிலிருந்து, லாகூருக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு பிறகு, அங்கேயிருந்து பாதுகாப்பு படை வீரர்கள் சூழ காரில் வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார்.

வழக்கமாக போர் கைதிகளை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைப்பது வழக்கம். ஆனால், அபிநந்தன் நேரடியாக இந்திய எல்லை பாதுகாப்பு படையிடம் (BSF) ஒப்படைக்கப்பட்டார். அவர்கள், தக்க ஆவண பரிசீலனை மற்றும் ஆள் அடையாள நடைமுறைகளை மேற்கொண்ட பிறகு, இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதன்பிறகு அவரிடம் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. செஞ்சிலுவை சங்கத்திடம் அபிநந்தன் ஒப்படைக்கப்படாததற்கு காரணம், அவர் போர்க் கைதியாக அறிவிக்கப்படாததுதான் என்று கூறப்படுகிறது.
இந்தியா-பாகிஸ்தான் நடுவே போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. எனவே அபிநந்தனை போர்க் கைதியாக பாகிஸ்தான் அறிவிக்கவில்லை. எனவே, அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பதில், சில நடைமுறை சிக்கல்கள் தளர்ந்துள்ளன.












Click it and Unblock the Notifications