வெடித்து கிளம்பிய பனாமா பேப்பர்ஸ் விவகாரம்.. ஐஸ்வர்யா ராயிடம் தீவிர விசாரணை நடத்திய அமலாக்கத்துறை!
டெல்லி: பனாமா பேப்பர்ஸ் வெளியான ஆவணங்களின் அடிப்படையில் வெளிநாடுகளில் பணம் பதுக்கிய குற்றச்சாட்டில் அமலாக்கத் துறையினர் விசாரணைக்காக இன்று ஐஸ்வர்யாராய் ஆஜராகி விளக்கமளித்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியாகியது. தொழிலதிபர்கள் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபடுவதற்காக வெளிநாடுகளில் கணக்குகள் மற்றும் போலி நிறுவனங்கள் தொடங்கி அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை பதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தப் பட்டியலில் உலகம் முழுவதும் பல்வேறு துறைசார்ந்த பிரபலங்களின் பெயர்கள் இடம் பெற்று இருந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யாராய், அவரது மாமனாரும் பாலிவு மெகாஸ்டாருமாகிய அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்களும் இடம் பெற்றன.
இந்த அடிப்படையில் சம்பந்தப்பட்ட நாடுகள் விசாரணையை முடுக்கிவிட்டு நிலையில் , பனாமா ஆவணத்தின் அடிப்படையில் இந்திய அமலாக்கத் துறையும் 2017ஆம் ஆண்டு முதல் விசாரணை மேற்கொண்டு வருகிறது.இந்திய ரிசர்வ் வங்கியின் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டத்தின் (எல்ஆர்எஸ்) கீழ் 2004ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டுப் பணம் அனுப்பியதற்கு விளக்கம் அளிக்குமாறு பச்சன் குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஐஸ்வர்யாராய் கடந்த 15 ஆண்டுகளில் பெற்ற வெளிநாட்டுப் பணம் குறித்த பதிவேடுகளை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், சம்மன் அனுப்பபட்ட போது இரண்டு முறை கூடுதல் அவகாசம் கேட்டு ஐஸ்வர்யாராய் மனு செய்தார். இதையடுத்து அவருக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஐஸ்வர்யாராய் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென அமலாக்கத் துறை இயக்குனரகம் மீண்டும் சம்மன் அனுப்பியது இதையடுத்து ஐஸ்வர்யாராய் இன்று டெல்லி அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து அவரது வாக்குமூலத்தை பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், தேவைப்படும் போது மீண்டும் விசாரணைக்கு
வரவேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications