பட்ஜெட்டில் சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடிகள் நலனுக்கு கூடுதல் நிதி- நிர்மலா சீதாராமன்
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடிகள் நலனுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து லோக்சபாவில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
மத்திய பட்ஜெட்டில் சுகாதார துறைக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டுதான் பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசும் பிரதமர் மோடியும் பெரு முதலாளிகளுக்காக செயல்படவில்லை. ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பிரதமர் மோடி பணியாற்றுகிறார்.

2 பேரால் 2 பேருக்கு ஆட்சி
2 பேரால் 2 பேருக்காக முந்தைய ஆட்சி நடத்தப்பட்டது. சாலையோர சிறு வணிகர்களுக்கு ரூ10,000 முதல் ரூ50 லட்சம் வரை ஓராண்டுக்கான மூலதனமாக மத்திய அரசு கொடுத்திருக்கிறது. இவர்கள் யாரும் கோடீஸ்வரர்கள் அல்ல.

ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
2021-22-ல் 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ 73,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இந்த திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் நலனுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதாக சில உறுப்பினர்கள் தெரிவித்தனர். அது உண்மை அல்ல.

சிறுபான்மையின் நலன் நிதி ஒதுக்கீடு
சிறுபான்மையினர் நலனுக்காக ரூ4,811 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 8.6% அதிகமான நிதி ஒதுக்கீடாகும். தலித்துகள் நலனுக்காக ரூ1,26,259 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ரூ83,257 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதேபோல் பழங்குடியினர் நலனுக்காக ரூ79,942 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் பழங்குடியினர் நலனுக்கு ரூ53,653 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

பொருளாதார சீர்திருத்தங்கள்
தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் வகையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உலகின் மிக முக்கிய பொருளாதார சக்தியாக இந்தியாவை மாற்றும் வகையில் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications