'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்!
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று நடத்திய பிரமாண்டமான பேரணியின் முடிவில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவரை சரியான நேரத்தில் அந்த இடத்தை அடையத் தவறியதால் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாளாகும். எனவே நாளை சரியான நேரத்திற்கு சென்று முதல்வர் கெஜ்ரிவால் வேட்பு மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் அலுவலகம்
புது டெல்லி தொகுதியில் போட்டியிடும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் ஆணையர் அலுவலகத்தை திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் அடைந்திருக்க வேண்டும். அங்கு ஆவணங்களை தாக்கல் செய்திருக்க வேண்டும்.

போக்குவரத்து நெரிசல்
ஆனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் பிற்பகல் 3 மணிக்குள் அவர் நடத்திய பிரம்மாண்ட வாகன பேரணி நிறைவடையவில்லை சரியான நேரத்திற்கு அவரால் செல்ல முடியவில்லை. இதனால் தான் கெஜ்ரிவால் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

உற்சாக வரவேற்பு
இதனிடையே பேரணியின் போது சாலையின் இருபுறமும் இருந்த ஆம் ஆத்மி தொண்டர்கள் பிரம்மாண்ட முழக்கங்களை எழுப்பி கெஜ்ரிவாலை வரவேற்றனர். அவர்களை பார்த்து கெஜ்ரிவால் கையசைத்து நன்றி தெரிவித்தார். முதல் ஐந்து வருடம் சூப்பர். உங்கள் ஆட்சி அடுத்தும் தொடர வேண்டும் என்று அவர்கள் ஆவேச முழக்கமிட்டனர்.

பாஜக 3 இடங்கள்
2015 ஆம் ஆண்டில் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 சட்டசபை இடங்களில் 67 இடங்களைப் பெற்று பெரும் வெற்றியைப் பெற்று அதிர வைத்தது. பாஜக 3 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அப்போது ஆம் ஆத்மியின் வாக்கு சதவீதம் 54.3 சதவீதமாக இருந்தது.

நம்பிக்கை
இந்த முறையும் ஒட்டுமொத்தமாக 70 இடங்களிலும் வெல்லும் நம்பிக்கையுடன், ஆம் ஆத்மி கட்சி களம் இறங்கி உள்ளது. 46 சிட்டிங் எம்.எல்.ஏக்களையும் 24 புதிய முகங்களையும் ஆம் ஆத்மி களமிறக்கியுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications