இன்று 76ஆவது சுதந்திர தினம்.. வாகாவில் வீறு நடைபோட்ட வீரர்கள்! கொடியிறக்கும் நிகழ்ச்சி கோலாகலம்
டெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு அட்டாரி வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
Recommended Video
இந்தியா சுதந்திரம் அடைந்து இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற இந்திய விடுதலை போராட்ட வீரர்கள் செய்த தியாகம் அளப்பரியது.
தங்கள் இன்னுயிரைப் பற்றி துளியும் கவலைப்படாமல் அவர்கள் செய்த தியாகமே நாம் இன்று சுதந்திர காற்றைச் சுவாசிக்கக் காரணமாக உள்ளது.

76ஆவது சுதந்திர தின விழா
இன்று நாட்டின் 76ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பிரதமரின் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டெல்லியில் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல மாநில முதல்வர்களும் தேசியக் கொடியை அவர்களின் மாநிலங்களில் ஏற்றினர்.

வாகா எல்லை
இதனிடையே மாலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அட்டாரி வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வைக் காண ஏராளமான பொதுமக்கள் அங்குத் திரண்டு இருந்தனர். ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் அங்கு பெரும் திரளாகக் கூடி இருந்தனர். கொரோனா பெருமளவு குறைந்துவிட்ட நிலையில், இந்த நிகழ்வைக் காண ஏராளமான பார்வையாளர்கள் திரண்டனர்.

பார்வையாளர்கள்
இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகாவில் இந்த நிகழ்வு 1959ஆம் ஆண்டு முதல் தினசரி நடந்து வருகிறது. இந்த நிகழ்வைக் காண இந்தியா பாகிஸ்தான் என இரு புறமும் பார்வையாளர்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்திய எல்லையில் மட்டும் சுமார் 25 ஆயிரம் பேர் இந்த நிகழ்வைக் காணத் திரண்டு இருந்தனர். திரண்டு இருந்த பொதுமக்கள் "இந்தியா ஜிந்தாபாத்" என்று உற்சாகமாக கோஷங்களை எழுப்பினர்.

என்ன நடக்கும்
இந்த நிகழ்வில் இந்திய வீரர்கள் சிவப்பு தொப்பிகள் மற்றும் காக்கி உடை அணிந்து இருந்தனர். பாகிஸ்தான் வீரர்கள் கருப்பு உடை அணிந்து இருந்தனர். மாலை நேரத்தில் எல்லை கதவுகள் திறக்கப்படும். பாகிஸ்தான் மற்றும் இந்திய வீரர்கள் சில அடி தூரத்தில் நின்று மார்ச் பாஸ்ட் செய்வார்கள். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடக்கும் இந்த நிகழ்வு கொடிகள் இறக்கப்பட்டதும் முடிவடையும். கொடிகள் மடிக்கப்பட்ட பின்னர், எல்லையில் உள்ள பெரிய இரும்புக் கதவுகள் மூடப்படும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications