இன்று 76ஆவது சுதந்திர தினம்.. வாகாவில் வீறு நடைபோட்ட வீரர்கள்! கொடியிறக்கும் நிகழ்ச்சி கோலாகலம்
டெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு அட்டாரி வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
Recommended Video
இந்தியா சுதந்திரம் அடைந்து இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற இந்திய விடுதலை போராட்ட வீரர்கள் செய்த தியாகம் அளப்பரியது.
தங்கள் இன்னுயிரைப் பற்றி துளியும் கவலைப்படாமல் அவர்கள் செய்த தியாகமே நாம் இன்று சுதந்திர காற்றைச் சுவாசிக்கக் காரணமாக உள்ளது.

76ஆவது சுதந்திர தின விழா
இன்று நாட்டின் 76ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பிரதமரின் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டெல்லியில் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல மாநில முதல்வர்களும் தேசியக் கொடியை அவர்களின் மாநிலங்களில் ஏற்றினர்.

வாகா எல்லை
இதனிடையே மாலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அட்டாரி வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வைக் காண ஏராளமான பொதுமக்கள் அங்குத் திரண்டு இருந்தனர். ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் அங்கு பெரும் திரளாகக் கூடி இருந்தனர். கொரோனா பெருமளவு குறைந்துவிட்ட நிலையில், இந்த நிகழ்வைக் காண ஏராளமான பார்வையாளர்கள் திரண்டனர்.

பார்வையாளர்கள்
இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகாவில் இந்த நிகழ்வு 1959ஆம் ஆண்டு முதல் தினசரி நடந்து வருகிறது. இந்த நிகழ்வைக் காண இந்தியா பாகிஸ்தான் என இரு புறமும் பார்வையாளர்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்திய எல்லையில் மட்டும் சுமார் 25 ஆயிரம் பேர் இந்த நிகழ்வைக் காணத் திரண்டு இருந்தனர். திரண்டு இருந்த பொதுமக்கள் "இந்தியா ஜிந்தாபாத்" என்று உற்சாகமாக கோஷங்களை எழுப்பினர்.

என்ன நடக்கும்
இந்த நிகழ்வில் இந்திய வீரர்கள் சிவப்பு தொப்பிகள் மற்றும் காக்கி உடை அணிந்து இருந்தனர். பாகிஸ்தான் வீரர்கள் கருப்பு உடை அணிந்து இருந்தனர். மாலை நேரத்தில் எல்லை கதவுகள் திறக்கப்படும். பாகிஸ்தான் மற்றும் இந்திய வீரர்கள் சில அடி தூரத்தில் நின்று மார்ச் பாஸ்ட் செய்வார்கள். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடக்கும் இந்த நிகழ்வு கொடிகள் இறக்கப்பட்டதும் முடிவடையும். கொடிகள் மடிக்கப்பட்ட பின்னர், எல்லையில் உள்ள பெரிய இரும்புக் கதவுகள் மூடப்படும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications