இன்று பாரத் பந்த்.. அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்
டெல்லி: அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு இன்று ஒரு நாள் பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராகவும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிகளை மறுஆய்வு செய்யக் கோரியும் நாடு முழுவதும் கடைகளை அடைத்து வணிகர்கள் பந்த் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பல்வேறு காரணங்களுக்காக விவசாயிகள், போக்குவரத்து தொழிற்சங்கங்கள், வணிகர்கள் இணைந்து நாடுதழுவிய பந்த் போராட்டததிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய ஈ-வே மசோதா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிகளை மறுஆய்வு செய்ய வேண்டும். வெளிநாட்டு இ-காமர்ஸ் நிறுவனங்களின் அத்து மீறலைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு பாரத் பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள வணிக மார்க்கெட்டுகள் இன்று மூடப்படுகின்றன.
இந்த பந்த் போராட்டத்திற்கு அகில இந்திய போக்குவரத்து நலச் சங்கம் மற்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அனைத்து மாநிலங்களிலும் உள்ள போக்குவரத்து அமைப்புகள் இன்று பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளதாக வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவாக காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை வாகனங்களை நிறுத்திவைத்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுத்தி உள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications