கன்னியாகுமரி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன்.. இந்தி, ஆங்கிலத்தில் அறிவித்த பாஜக
டெல்லி: கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக பொன். ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பெயரை இந்தி, ஆங்கிலத்தில் அறிவித்துள்ளது பாஜக மேலிடம்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என பாஜக தலைவர்கள் பலரும் அவ்வப்போது தமிழ் மொழியின் சிறப்பை பேசுகின்றனர். தமிழகத்தில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் அவ்வையார், பாரதியார் பாடல்களை பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசுவது வழக்கம்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் நிர்மலா சீதாராமன் தம்முடைய பட்ஜெட் உரையில் திருக்குறளை தவறாமல் மேற்கோள் காட்டுவார். தம்மால் தமிழ் படிக்க முடியவில்லையே என தமிழக பிரசார கூட்டத்தில் ஆதங்கப்பட்டார் அமித்ஷா.

இந்தியில் கடிதம்
அதேநேரத்தில் மத்திய அமைச்சர்கள் இந்தியில்தான் எம்.பி.க்களுக்கு கடிதம் அனுப்புவோம் என அடம்பிடிக்கின்றனர். இதற்கு அண்மையில் மார்க்சிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தியில் தமக்கு வந்த கடிதத்தை திருப்பியும் அனுப்பினார் வெங்கடேசன்.

இந்தியில் வேட்பாளர் அறிவிப்பு
இந்நிலையில் கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வேட்பாளராக போட்டியிடுவார் என பாஜக மேலிடம் இன்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அறிக்கை முழுவதும் இந்தியில்தான் இருக்கிறது. இந்தியில் என்ன இருக்கிறது என்பது இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் தமிழர்களுக்கு தெரியாது.

ஆங்கிலத்திலும்..
அதேநேரத்தில் கவனமாக தங்களை யாரும் குறை சொல்லிவிடக் கூடாது என்பதற்காக மாநிலம், தொகுதி, வேட்பாளர் பெயரை மட்டும் ஆங்கிலத்தில் இடம்பெற செய்திருக்கின்றனர். ஏற்கனவே பாஜக மீது தமிழகத்தில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இதனை சமாளிக்கத்தான் பிரதமர் மோடி உள்ளிட்டோர் தமிழ் மொழி, தமிழர் கலாசார பெருமை பற்றி எல்லாம் அடிக்கடி பேசுகின்றனர்.

தமிழில் வெளியாகுமா?
தற்போது தேர்தல் காலம்.. இதற்கான வேட்பாளர் அறிவிப்பையாவது பாஜக தமிழில் வெளியிட்டிருக்கலாம். அதிமுகவிடம் தொகுதிகளை அடித்து பறிப்பதில் கவனமாக இருக்கும் தமிழக பாஜக தலைவர்கள் இதை எல்லாம் மேலிடத்துக்கு சொல்லி இருந்தால் அவர்களின் தமிழ் மொழி பற்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டிருக்கும். தமிழக சட்டசபை தேர்தலுக்கான 20 தொகுதி வேட்பாளர்களையாவது தமிழில் பாஜக அறிவிக்குமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications