பட்ஜெட் கூட்டத்தொடர் 2022.. காலை, மாலை என இரு வேலைகளிலும் நடைபெறும் நாடாளுமன்றம்.. காரணம் இது தான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் காலை மற்றும் மாலை என இரு வேலைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலுக்கு மத்தியில் வரும் ஜன. 31ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. ஜன.31-ல் குடியரசுத் தலைவர் உரையும் அதைத் தொடர்ந்து, பிப். 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Budget session Different timings for Lok Sabha, Rajya Sabha amid Covid

இந்தச் சூழ்நிலையில், கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் காலை மற்றும் மாலை என இரு வேலைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் பிப். 1ஆம் தேதி காலை 11 மணிக்கு நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அதன் பின்னர் பிப். 2 முதல் பிப்ரவரி 11 வரை பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நடைபெறுகிறது.

கொரோனா பரவல் காரணமாக மக்களவை மாலை 4 மணி முதல் 9 மணி வரையும் மாநிலங்களவை காலை 9 முதல் 2 மணி வரையும் தனித்தனியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு வரும் மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆனால் இரண்டாம் அமர்வுக்கான நேரக்கட்டுப்பாடுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

முன்னதாக கடந்த 2021 பட்ஜெட் கூட்டத்தொடர் சமயத்திலும் கொரோனா வழிகாட்டுதல்களின்படி இதே நடைமுறை பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+