இந்தியாவில் கலீபா ஆட்சி.. ஆப்கனில் தாக்குதல் நடத்திய ஐஎஸ்ஐஎஸ்-கே திட்டம்- வெளியான பரபரப்பு தகவல்கள்
டெல்லி: காபூல் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்- கே தீவிரவாத அமைப்பினர் இந்தியாவில் தங்கள் ஆட்சியை நிறுவ சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை அமைப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் நேற்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு, ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் துணை அமைப்பாகும்.

இந்தியாவிற்கு வர திட்டம்
இதுகுறித்து உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ISIS-K, "ஜிஹாத்தை மத்திய ஆசியாவிற்கும் பின்னர் இந்தியாவிற்கும் ஏற்றுமதி செய்யும்" என்று நம்புகிறது என்கிறார். பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்வதும், இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்வதும் அவர்களின் திட்டமாக உள்ளன.

கலீபா ஆட்சி
மேலும் அந்த அதிகாரி கூறுகையில், "கருத்தியல் ரீதியாக, அவர்கள் கலிபாவின் ஆட்சியை நிறுவ விரும்புகிறார்கள், இந்தியா அதில் சேர்க்கப்பட்டுள்ளது. காபூல் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் - கே அந்த உற்சாகத்தில், இந்தியாவிலும் தீவிரவாதிகளை அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளனர். இந்தியாவில் தங்கள் ஆட்சியை நிறுவ தேவைப்படும் முயற்சிகளில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நபிகள் நாயகத்தின் மறைவிற்குப் பிறகு இஸ்லாமிய ஆட்சியை நேர்வழியில் நின்று நடத்தியவர்களே கலீபாக்கள்.

இந்தியாவில் ஆட்சி
ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாத அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய சில நாட்களில், பாகிஸ்தான் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசார், ஆப்கானிஸ்தானின் கந்தகருக்கு சென்றுள்ளதாகவும், அங்குள்ள தலிபான் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video

தாலிபான்கள்
ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட தாலிபான்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, அவர் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு தாலிபான்கள் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாலிபான்களின் ஆப்கன், தீவிரவாதிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை திறந்து விட்டுள்ளதை உணர்ந்துதான் உலக நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆரம்பித்துள்ளன.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications