உதவிக் கரம் நீட்டிய கனடா.. 350 வென்டிலேட்டர், 25,000 டோஸ் ரெம்டெசிவிர் மருந்துகள் இந்தியா வந்தன
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கனடா நாட்டிலிருந்து இந்தியாவுக்கு 350 வென்டிலேட்டர், 25,000 டோஸ் ரெம்டெசிவிர் மருந்துகள், அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கனடா நாட்டு ராணுவ விமானமான சிசி-150 மூலமாக இந்த உபகரணங்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளன. கனடா நாட்டு செஞ்சிலுவை சங்கம் ஏற்கனவே 10 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கியுள்ளது. யுனிசெப் 1,450 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்களை கொடுத்துள்ளன.
இந்தியாவுக்கான கனடா தூதர் நாதிர் பட்டேல் கூறுகையில், கனடாவிலிருந்து இரண்டாவது, ஷிப்மென்ட் மருத்துவ உபகரணங்கள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளன. இந்தியாவின் முன்கள பணியாளர்கள் சோர்வு இல்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவுடன் நாங்கள் இணைந்து கொரோனா நோயை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications