ரூ.1000 கோடி ஹவாலா நெட்வொர்க் அம்பலம்.. சீன நாட்டுக்காரர் லூயோ சாங் மீது பண மோசடி சட்டம் பாய்ந்தது
டெல்லி: ரூ .1000 கோடி ஹவாலா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சீனரான லூயோ சாங் என்ற சார்லி பெங் மீது பணமோசடி சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
Recommended Video
'சார்லி பெங்' என்ற போலி பெயரில் இந்தியாவில் வசிக்கும் லூயோ, இங்கே சீனாவுக்காக உளவு பார்த்துள்ளார் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
ஹவாலா நெட்வொர்க் மூலம் பணப் பரிமாற்றம் செய்த தகவலின்பேரில் சீன நாட்டைச் சேர்ந்த 42 வயதான லூ சாங் வருமான வரித்துறை பிடியின்கீழ் வந்தார்.

கைது
லூ சாங் மோசடி மற்றும் போலி பாஸ்போர்ட் வழக்கில் 2018ல் சிறப்பு செல் மூலம் கைது செய்யப்பட்டார். இருப்பினும், பின்னர் ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில்தான், தற்போது சிக்கியுள்ளார் அவர். ஐடி சோதனைகளுக்குப் பிறகு, அமலாக்க இயக்குநரகம் (இடி) டெல்லி காவல்துறையிடம் விவரங்களை கோரியதுடன், அவர் மீது பணமோசடி வழக்கையும் பதிவு செய்துள்ளது. லூ சாங் கடந்த மூன்று ஆண்டுகளாக ஹவாலா மோசடி நடத்தியுள்ளார்.

அடையாள அட்டைகள்
இதற்காக, இந்திய அடையாள அட்டைகளை பெற்றுள்ளார். சார்லி பாங் என்ற பெயரில் இந்திய பாஸ்போர்ட் மற்றும் ஆதார் வைத்திருந்தார். பந்தன் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கியில் உள்ள வங்கி ஊழியர்களின் உதவியுடன் தினசரி சுமார் 3 கோடி ரூபாய் பணத்தை ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்துள்ளார். 40க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளையும் வைத்திருக்கிறார்.

ரெய்டுகள்
ஐடி சார்பில் பல வங்கி ஊழியர்களிடமும் சோதனை செய்துள்ளது. டெல்லி, குர்கான் மற்றும் காசியாபாத்தில் சுமார் 24 பகுதிகளில் ஐடி ரெய்டுகள் நடந்துள்ளன. லூ சாங்கிற்கு எதிரான வழக்கு ஏற்கனவே சீன அரசுடான இந்திய தரப்பின் மோதலை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

சீனா கோபம்
சீன தரப்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில், "சீன அரசு எப்போதும் வெளிநாட்டு சீன குடிமக்களை உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளது. அதே நேரத்தில், சீன நாட்டு மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஒரு பக்க சார்பற்ற முறையில், சட்டத்தை அமல்படுத்த வெளிநாட்டு அரசுகளையும், தொடர்புடைய துறைகளும் நாங்கள் கோருகிறோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications