1000 கோடிக்கு "ஹேர்கட்" யாராவது கேள்விப்பட்டிருக்கீங்களா? ப.சிதம்பரத்துக்கு வந்ததே கோபம்! என்னாச்சு?
டெல்லி : வங்கிகள் கார்பரேட் நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து '1000 கோடி ரூபாயில் ஹேர்கட் செய்வதை கேள்விப்பட்டுள்ளீர்களா?' முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள பெரும் தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவு செய்வதற்காகவும், புதிய முதலீடுகளுக்காகவும் இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கடனாக பெற்றுள்ளனர்.
இந்நிலையில் அவர்களிடமிருந்து கடனை முறையாக வசூலிக்காமல் மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.

கடன் தள்ளுபடி
அதே நேரத்தில் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை எனவும் தற்போதுள்ள சூழலில் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறி இருக்கிறது. இந்த நிலையில் தான் தற்போது சுமார் 517 என்ற எண்ணிக்கையிலான கடன் கணக்குகளில் 5 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாயை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளதோடு இதனை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ப.சிதம்பரம்
ஏற்கனவே மத்திய அரசின் பல்வேறு திட்டங்களையும் கொள்கைகளையும் விமர்சித்து வரும் நிலையில், வங்கிகள் கார்பரேட் நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து '1000 கோடி ரூபாயில் ஹேர்கட் செய்வதை கேள்விப்பட்டுள்ளீர்களா?' முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ட்விட்டர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்," இதற்கு முன் வங்கிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை ஒரு வித நடுக்கத்துடன் தள்ளுபடி செய்யும்.

வங்கிகளின் கடன்
ஏனெனில் ரிசர்வ் வங்கியும் மத்திய நிதி அமைச்சகமும் அவர்களை கேள்வி கேட்கும். ஆனால் தற்போது திவால் செயல்முறையின் மூலம் வங்கிகள் எந்தவித தயக்கமும் இன்றி வங்கிகளின் கடன்களை தள்ளுபடி செய்கிறது. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் கடன் தள்ளுபடிக்கான தீர்மானத்தை அங்கீகரித்ததால் நிறுவனங்கள் கடனில் இருந்து விடுவிக்கப்படுகிறது.

"ஹேர்கட்"
வங்கிகள் இதை "ஹேர்கட்" என அழைக்கிறது. இதேபோல 517 வழக்குகளில் 5,32,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு வழக்கிற்கு 1000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது. நீங்கள் 1000 கோடியில் ஹேர்கட் செய்வதை கேள்விப்பட்டதுண்டா?" என விமர்சித்துள்ளார். இதனையடுத்து இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருவதோடு விவாதங்களையும் நடத்தி வருகின்றனர்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்?












Click it and Unblock the Notifications