கொரோனா: தெலுங்கானாவிலும் பாதிப்பு ஆயிரத்தை கடந்தது! டெல்லியில் 3 ஆயிரத்தை நெருங்குகிறது
டெல்லி: தெலுங்கானாவிலும் கொரோனாவின் பாதிப்பு 1,000-த்தை தாண்டியுள்ளது. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி இன்று காலை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,892. கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6,184. கொரோனாவால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 872.

மகாராஷ்டிராவில்தான் மிக மோசமாக கொரோனா பாதிப்பு உள்ளது. சுமார் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3301 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 151.
3-வது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்குகிறது. மொத்தம் 2918 பேர் பாதிக்கப்பட்டும் 54 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
ராஜஸ்தானில் 2185 பேரும் மத்திய பிரதேசத்தில் 2096 பேரும் தமிழகத்தில் 1885 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்திலும் 1868, ஆந்திராவில் 1097 பேர் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
கொரோனா பாதிப்பில் 1,000-த்தை தாண்டிய 9-வது மாநிலமாக தெலுங்கானா இணைந்துள்ளது. தெலுங்கானாவில் மொத்தம் 1097 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதுவரை தெலுங்கானாவில் 31 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவில் 458 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 338 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications