மே 3ம் தேதிவரை.. ரயில் போக்குவரத்து, உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து
டெல்லி: மே 3ம் தேதிவரை, நாடு முழுக்க பயணிகள் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே அறிவித்துள்ளது. விமானங்களும் மே 3ம் தேதி நள்ளிரவு வரை ரத்து செய்யப்படுகின்றன.
Recommended Video
நாடு தழுவிய லாக்டவுனின் ஒரு பகுதியாக, மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரை அனைத்து பயணிகள், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளையும் ரயில்வே நிறுத்தி வைத்தது. நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, சரக்கு மற்றும் சிறப்பு பார்சல் ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், லாக்டவுன் விலக்கி கொள்ளப்பட்டு நாளை முதல் இயல்பு நிலை திரும்பும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றியபோது, லாக்டவுனை மே 3ம் தேதிவரை நீட்டிப்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில், ரயில்வே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மே 3ம் தேதிவரை அனைத்து வகையான, பயணிகள் ரயில்வே சேவைகளையும் சஸ்பென்ட் செய்வதாக அறிவித்துள்ளது.
இதேபோல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் மே 3ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. மே 3ம் தேதி நள்ளிரவு வரை விமான சேவைகள் மீண்டும் துவங்காது.
பல விமானங்களும், சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற முக்கிய நகர விமான நிலையங்களில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை அப்படியே நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிகிறது.
ஏற்கனவே மாநில அரசுகள், பஸ் போக்குவரத்தை இயக்காத நிலையில், ரயில் சேவைகளும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய தேவைகளுக்கு சொந்த வாகனங்களை மட்டுமே நம்பியிருக்கும் சூழ்நிலை உள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்காக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல விரும்புவோர், பாஸ்களை பெற்றுக்கொண்டுதான் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications