மே 3ம் தேதிவரை.. ரயில் போக்குவரத்து, உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து
டெல்லி: மே 3ம் தேதிவரை, நாடு முழுக்க பயணிகள் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே அறிவித்துள்ளது. விமானங்களும் மே 3ம் தேதி நள்ளிரவு வரை ரத்து செய்யப்படுகின்றன.
Recommended Video
நாடு தழுவிய லாக்டவுனின் ஒரு பகுதியாக, மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரை அனைத்து பயணிகள், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளையும் ரயில்வே நிறுத்தி வைத்தது. நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, சரக்கு மற்றும் சிறப்பு பார்சல் ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், லாக்டவுன் விலக்கி கொள்ளப்பட்டு நாளை முதல் இயல்பு நிலை திரும்பும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றியபோது, லாக்டவுனை மே 3ம் தேதிவரை நீட்டிப்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில், ரயில்வே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மே 3ம் தேதிவரை அனைத்து வகையான, பயணிகள் ரயில்வே சேவைகளையும் சஸ்பென்ட் செய்வதாக அறிவித்துள்ளது.
இதேபோல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் மே 3ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. மே 3ம் தேதி நள்ளிரவு வரை விமான சேவைகள் மீண்டும் துவங்காது.
பல விமானங்களும், சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற முக்கிய நகர விமான நிலையங்களில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை அப்படியே நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிகிறது.
ஏற்கனவே மாநில அரசுகள், பஸ் போக்குவரத்தை இயக்காத நிலையில், ரயில் சேவைகளும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய தேவைகளுக்கு சொந்த வாகனங்களை மட்டுமே நம்பியிருக்கும் சூழ்நிலை உள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்காக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல விரும்புவோர், பாஸ்களை பெற்றுக்கொண்டுதான் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications