தயாராக இருங்கள்.. லாக்டவுனை நீக்கியதும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும்.. இந்தியாவிற்கு "ஹு" எச்சரிக்கை
டெல்லி: இந்தியாவில் ஊரடங்கு முடிந்த பின் கொரோனா கேஸ்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும், இதற்கு மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார மையத்தின் பொது இயக்குனரின் சிறப்பு தூதர் டேவிட் நபாரா தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை தற்போது 42,505 ஆக உள்ளது . பலி எண்ணிக்கை 1391 ஆக உள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனாவின் வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.இந்தியாவில் கொரோனா பரவும் வேகத்தை உலக சுகாதார மையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில் உலக சுகாதார மையத்தின் பொது இயக்குனரின் சிறப்பு தூதர் டேவிட் நபாரா எக்கனாமிக் டைம்ஸ் நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது என்பது குறித்து அவர் பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி அளித்தார்
டேவிட் நபாரா தனது பேட்டியில், இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பு பணிகள் நன்றாக செய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் மிக சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். காண்டாக்ட் டிரேஸ் செய்வதிலும், நோயாளிகளை தனிமைப்படுத்துவதிலும் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது. மிக சிறப்பாக அவர்கள் புள்ளி விவரங்களை கையாள்கிறார்கள்.

மக்கள் ஒத்துழைப்பு
மக்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். ஒரு வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை கண்டுபிடிப்பது மிக முக்கியம். இதற்கு காண்டாக்ட் டிரேஸ் அவசியம். இந்தியா அதை சிறப்பாக செய்து வருகிறது. நாம் வைரசுக்கு முன்பாக எப்போதும் இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் பரவலை தடுக்க முடியும். இந்தியாவில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது சிறப்பான முடிவு.

வைரஸ் பரவல்
அப்போதுதான் வைரஸ் பரவலை நாட்டுக்குள் தடுக்க முடியும். ஆனால் லாக் டவுன் காரணமாக வைரஸ் மொத்தமாக அப்படியே மறைந்து விடாது. லாக் டவுனுக்கு பின்பும் வைரஸ் இருக்கும். இந்தியாவில் ஊரடங்கு முடிந்த பின் கொரோனா கேஸ்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும். இந்த வைரஸ் எங்கெல்லாம் தீவிரம் அடைகிறது என்று அரசு பார்க்க வேண்டும். இதற்கு மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும்.

கவனம்
மொத்தமாக லாக் டவுனை நீக்க கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக லாக் டவுனை மெதுவாக நீக்க வேண்டும். அதே சமயம் பொருளாதார பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மக்கள் லாக் டவுனுக்கு பிறகும் சமூக இடைவெளியை கடைபிடிக்க விடும். இதற்கு ஏற்றபடி அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும், என்று அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications