இந்தியாவில் செப்டம்பரில் கொரோனா பாதிப்பு மிகமிக உச்சகட்டமாக இருக்கலாம்- வல்லுநர்கள் குழு வார்னிங்
டெல்லி: இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பானது மிக மிக உச்சகட்டமனதாக இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் குழு எச்சரித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,77,864 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 26,828 ஆக உள்ளது. கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,73,007 ஆகும்.

4 மாநில பாதிப்பு
மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இந்த 4 மாநிலங்களில் மட்டுமே சுமார் 6 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா 4-வது இடத்தில் உள்ளது.

செப்டம்பரில் படுமோசம்
தற்போது கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அது பரிசோதனைகள் நிலையில் இருந்து வருகிறது. இதனிடையே தற்போதைய நிலை நீடித்தால் இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு மிக மிக உச்சகட்டமானதாக இருக்கும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.

பொதுமக்களின் பொறுப்பு
Public Health Foundation of India -ன் தலைவர் பேராசிரியர் கே. ஶ்ரீநாத் ரெட்டி இது தொடர்பாக கூறியுள்ளதாவது; செப்டம்பர் மாதம் மத்தியில் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு மிகமிக மோசமானதாக இருக்கும். முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது என பொதுமக்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டியது கட்டாயம்.

கட்டுப்பாடுகள் தேவை
கொரோனா பரவுவதைத் தடுக்க அரசாங்கமும் இன்னமும் வேகமாக செயல்பட வேண்டும். இந்தியாவில் சராசரியாக 30,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு தரப்பில் இருந்தும் மேற்கொள்ள வேண்டும். அரசு மற்றும் பொதுமக்களின் செயல்பாடுகளைப் பொறுத்துதான் கொரோனாவை கட்டுப்படுத்தவும் முடியும். இவ்வாறு ஶ்ரீநாத் ரெட்டி கூறினார்.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications