பரவுகிறது கொரோனா.. இந்த 5 மாநிலங்களும் உஷாராக இருக்க வேண்டும்.. மத்திய அரசு எச்சரிக்கை
டெல்லி: இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மெல்ல அதிகரிக்க துவங்கி உள்ளது. இதனால் கொரோனா தலைதூக்கி உள்ள மகாராஷ்டிரா, மிசோராம், உத்தர பிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்களுக்கு யூனியன் பிரதேசமான டெல்லிக்கும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவில் தலைநகர் டெல்லி உள்பட சில இடங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கி உள்ளது. ஏப்ரல் 19ம் தேதியுடன் முடிவடைந்த ஒரு வாரத்தில் மட்டும் டெல்லியில் 2,671 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களிலும் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்துள்ளது. இதனால் நோய் உறுதி செய்யும் தன்மை உயர்ந்து வருகிறது.

5 இடங்களில் அதிகரிப்பு
குறிப்பாக இந்தியாவில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் தற்போது அரியானா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மிசோராம் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் தான் அதிகளவில் தொற்று எண்ணிக்கை பதிவாகிறது. நோய் உறுதி செய்யும் தன்மையும் உயர்ந்து வருகிறது. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 11,860 ஆக உயர்ந்து இருந்தது.

மத்திய அரசு கடிதம்
இந்நிலையில் மத்திய அரசு சார்பில் டெல்லி மற்றும் 4 மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அறிவுரை வழங்கி கடிதம் எழுதியுள்ளது. அதன்படி அரியானா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோராம் ஆகிய 4 மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசமான டெல்லிக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தடுப்பு நடவடிக்கை
நோய் பாதிப்பும், நோய் உறுதி செய்யும் தன்மையும் உயர்ந்து வருகிறது. இதனால் மாநிலம்/யூனியன் பிரதேசத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையில் சளி, காய்ச்சல், சுவாச பிரச்சனைகளுடன் வருபவர்களை கண்காணித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றனரா என்பதையும் ஆராய வேண்டும்.

5 நடைமுறைகள் கட்டாயம்
பரிசோதனை செய்தல், பாதிப்பை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல், கொரோனா தடுப்புக்கான வழிமுறைகளை கடைப்பிடித்தல் உள்ளிட்ட 5 நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணிவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications