டெல்லியில் நீதிபதிக்கே இப்படியொரு நிலையா? வென்டிலேட்டர் கிடைக்காமல் திண்டாடும் மாஜிஸ்திரேட்
டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ள நீதிபதி ஒருவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் கொரோனா பரவலின் 2ஆம் அலை மிக மோசமாக உள்ளது. இதனால் அம்மாநிலத்திலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் ஏற்கனவே நிரம்பிவிட்டன. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் சிகிச்சை போதுமானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீதிபதி ஒருவருக்கே டெல்லியில் வென்டிலேட்டர் சிகிச்சை கிடைக்காமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது டெல்லி தீஸ் ஹஜாரி நீதிமன்ற வளாகத்தில் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டாக உள்ளவர் நுபுர் குப்தா.
அவருக்குக் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. 32 வயதான அவர், டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது உடல்நிலை மோசமாகத் தொடங்கியது.
மூச்சுத் திணறல் ஏற்படுவதைத் தவிர்க்க அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை உதவி தேவைப்பட்டது. இருந்தாலும் பெண் நீதிபதிக்கு வென்டிலேட்டர் கிடைக்கவில்லை என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
'டெல்லி கொரோனா' செயலியிலுள்ள தகவலின்படி, மாநிலத்திலுள்ள 1,657 வென்டிலெட்டர் வசதி கொண்ட ஐசியு படுக்கைகளில் தற்போது 5 படுக்கைகள் மட்டுமே காலியாகவுள்ளன. தலைநகரில் நேற்று மட்டும் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.
வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், நிலைமை மோசமாவதைத் தடுக்க டெல்லி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications