இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு - 2.85 கோடி பேர் மீண்டனர் - 1,587 பேர் பலி
இந்தியாவில் ஒரேநாளில் 89,977பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,85,80,647 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரேநாளில் 89,977பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,85,80,647 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 2,97,62,793 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 62,480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 11வது நாளாக ஒரு லட்சத்துக்கும் கீழ் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 2,97,62,793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரேநாளில் 89,977பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,85,80,647 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 95.93 சதவீதமாக இருக்கிறது.
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 1,587 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,83,490 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.29 சதவீதமாக உள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவமனைகளில் 7,98,656 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 73 நாட்களில் 8 லட்சத்திற்கும் கீழே குறைந்துள்ளது. நாடு முழுவதும் 26,89,60,399 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications