குஜராத் மாடலை நொறுக்கிய டெல்லி மாடல்.. அமித் ஷாவை பழி வாங்கிய பிரசாத் கிஷோர்.. பின்னணி என்ன?
டெல்லியில் ஆம் ஆத்மி பெற்ற மாபெரும் தேர்தல் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் மிக முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி பெற்ற மாபெரும் தேர்தல் வெற்றிக்கு அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மிக முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் பரபரப்பிற்கு இடையில் டெல்லி தேர்தல் முடிவுகள் வேகமாக வெளியாகி வருகிறது. டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 57 இடங்களில் முன்னிலை, பாஜக 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பெரும்பாலும் இன்று மாலைக்குள் ஆம் ஆத்மி 60 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது என்கிறார்கள். அங்கு 10 தொகுதிகளில் மட்டும் பெரிய அளவில் இழுபறி நீடித்து வருகிறது.

டெல்லி எப்படி
டெல்லியில் ஆம் ஆத்மி பெற்ற இந்த வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் மிக முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம்தான் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆலோசனை நிறுவனமாக இருந்தது. தமிழகத்தில் திமுகவிற்கு பிரசாந்த் கிஷோர்தான் தேர்தல் ஆலோசகராக இருக்கிறார். பிரசாந்த் கிஷோர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் பிரச்சார திட்டங்கள் அனைத்தையும் வகுத்தவர்.

எப்படி செயல்பட வேண்டும்
அதாவது ஆம் ஆத்மி பிரச்சாரத்தில் என்ன பேச வேண்டும். சமூக வலைதளங்களில் எப்படி பிரச்சாரம் செய்ய வேண்டும். என்ன மாதிரியான கருத்துக்களை பதிவிட வேண்டும். குஜராத் மாடலுக்கு எதிராக டெல்லி மாடலை எப்படி வைரலாக்க வேண்டும். மக்களை எப்படி திரட்ட வேண்டும். 5 ஆண்டு ஆட்சி சாதனைகளை எப்படி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று பல விஷயங்களை பிரசாந்த் கிஷோர்தான் வகுத்து கொடுத்தார்.

கிஷோர் வெற்றி
ஆம் ஆத்மி கட்சிக்காக பிரசாந்த் கிஷோர் பாடலை கூட வெளியிட்டார். இந்த பாடல் அக்கட்சிக்கு பிரச்சாரத்தின் போது பெரிய அளவில் உதவியது. அதேபோல் ஆம் ஆத்மி கட்சிக்காக புதிய இணையதள டீம் ஒன்றையே பிரசாந்த் கிஷோர் உருவாக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது பெரிய அளவில் அக்கட்சிக்கு உதவியது. டெல்லியில் இரண்டு லோக்சபா தேர்தல் உட்பட ஆறு தேர்தல்களில் ஆம் ஆத்மி இதுவரை போட்டியிட்டு இருக்கிறது.

ஆம் ஆத்மி கிஷோர்
முதல்முறையாக இப்போதுதான் ஆம் ஆத்மி கிஷோரை தங்களுக்காக பணிக்கு அமர்த்தியது. தற்போது ஆம் ஆத்மி அதில் பெரிய அளவில் வெற்றியும் பெற்றுள்ளது. இதற்கு பிரசாந்த் கிஷோர் மட்டுமே காரணம் என்று கூற முடியாது. ஆம் ஆத்மி டெல்லியில் நடத்திய சிறப்பான ஆட்சியும் அவர்கள் கொண்டு வந்த நலத்திட்டங்களும் கூட இதற்கு காரணம்தான். இந்த தேர்தலுக்காக கிஷோர் அறிவுரையின் பெயரில் 8000 கூட்டங்கள் நடத்தப்பட்டது.

கடினம்
பிராண்ட் ஏகே என்று வாசகம் உருவாக்கப்பட்டது. 70 தொகுதிகளில் தெரு தெருவாக பிரச்சாரம் செய்ய நபர்கள் ஏற்பாடு செய்யப்பட்டனர். இளைஞர்களை கவர தனியாக கூட்டங்கள் நடத்தப்பட்டது. சமூக வலைதளங்களை மொத்தமாக ஆம் ஆத்மி ஆக்கிரமித்தது. 20-25 வயதில் பல இளைஞர்களை பணிக்கு அமர்த்தினார் கிஷோர். இதற்கு எல்லாம் பயனாக தற்போது டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றுள்ளார்.

சிஏஏ எதிர்ப்பு
முன்னதாக சிஏஏ பிரச்சனை காரணமாக பாஜக பிரசாந்த் கிஷோர் இடையே சண்டை வந்தது. இதனால் பீகார் அரசியலில் பெரிய பிரச்சனை ஏற்பட்டது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்தே இதனால், பிரஷாந்த் கிஷோர் நீக்கப்பட்டார். நிதிஷ் - பிரசாந்த் கிஷோர் நட்பு மொத்தமாக உடைந்தது. அமித் ஷாவிற்கு எதிராக அப்போதே கிஷோர் பேட்டி கொடுத்தார். தற்போது அவர் சொன்னது போலவே கிஷோர் டெல்லி தேர்தலில் அமித் ஷாவை பழி வாங்கி உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications