டெல்லியில் தொடர் போராட்டம்-உச்சநீதிமன்ற வழக்கில் தங்களது வாதங்களையும் கேட்க கோருகிறது விவசாய சங்கம்!
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 16-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே விவசாய சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் தங்களது வாதங்களையும் கேட்க கோரி விவசாய சங்கங்கள் மனுத் தாக்கல் செய்துள்ளன.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களால் வாழ்வாதாரம் நாசமாகும் என்பதால் விவசாயிகள் 16 நாட்களாக டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரிலும் இடைவிடாமல் போராடி வருகின்றனர். இதனையடுத்து மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை ஏற்படுத்தின.

ஒருகட்டத்தில் விவசாய சட்டங்களில் திருத்தம் கொண்டுவரலாம் என மத்திய அரசு கருதியது. இது தொடர்பான வரைவு அறிக்கையை விவசாய சங்கங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியது. ஆனால் இதனை விவசாய சங்கப் பிரதிநிதிகள் நிராகரித்துவிட்டனர். தங்களைப் பொறுத்தவரை விவசாய சட்டங்களை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறோம் என்றனர்.
ஆனால் மத்திய அரசோ, ஒருபோதும் விவசாய சட்டங்களை திரும்பப் பெற முடியாது என திட்டவட்டமாக கூறியது. இதனையடுத்து ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முடக்குவது, நாடு தழுவிய போராட்டம் என அடுத்த கட்டங்களை நோக்கி விவசாயிகள் போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
மேலும் திமுக எம்.பி. திருச்சி சிவா உட்பட 6 பேர் விவசாய சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 12-ந் தேதி மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இவ்வழக்கின் விசாரணை டிசம்பர் இறுதியில் நடைபெற உள்ளது.
இந்த வழக்கில் தங்களது வாதங்களையும் கேட்க அனுமதி கோரி போராடும் விவசாய சங்கங்களின் ஒன்றான பிகேயூ மனுத் தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications