பிரதமர் நரேந்திர மோடி வீட்டில் தீ விபத்து.. 9 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள்.. டெல்லியில்
டெல்லி: டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் இன்று இரவு சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் லோக் கல்யாண் மார்க் பகுதியில், பிரதமரின் இல்லம் அமைந்துள்ளது. இரவு 7.25 மணி அளவில் இந்த இல்லத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் மொத்தம் ஒன்பது தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர்.

வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சில நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் இல்லத்தில் எந்த பகுதியில் முதலில் தீ விபத்து ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது? என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. அதேநேரம் இது சிறிய அளவில்தான் தீ விபத்துதான் என்றும், பிரதமரின் இல்லம் என்பதால்தான், 9 வண்டிகளில் வீரர்கள் அவசரமாக விரைய நேரிட்டது, மற்றபடி அச்சப்பட தேவையில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரில், கங்கை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றபோது கங்கை தீரத்தில் உள்ள படிக்கட்டில் தவறுதலாக தடுமாறி கீழே விழுந்தார். இந்த நிலையில் தற்போது பிரதமர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, இதுபோன்ற அபசகுணங்களை தவிர்க்க, சிறப்பு பூஜைகளை பிரதமர் மேற்கொள்வது நலம் பயக்கும் என பாஜக ஆதரவாளர்கள், சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications