லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் விடாமல் அமளி.. காங். எம்பிக்கள் 7 பேர் சஸ்பெண்ட்.. சபாநாயகர் அதிரடி!
நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 எம்பிக்களை இந்த கூட்டத்தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார் .
டெல்லி: நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 எம்பிக்களை இந்த கூட்டத்தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார் .
டெல்லி கலவரம் தொடர்பான அமளியால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடங்கி உள்ளது. அங்கு கடந்த மூன்று நாட்களாக அமளி ஏற்பட்டு வருகிறது. மூன்று நாட்களுக்கு முன் மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கூடியது. இந்த நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான விவாதம் கடந்த மாதம் நடந்த நிலையில், தற்போது மீண்டும் அவை கூடியுள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி வரை அவை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடர் தொடக்கத்தில் இருந்தே அவை டெல்லி கலவரம் தொடர்பான வாதத்தால் ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லியில் கலவரம் தொடர்பாக விசாரிக்க வேண்டும். லோக்சபாவில் கலவரம் பற்றி விவாதம் செய்ய வேண்டும். உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும், இதை குறித்து விவாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
நேற்றே இதனால் கோபம் அடைந்த சபாநாயகர் ஓம் பிர்லா , எம்பிக்கள் யாரும் அவைக்கு முன்னே வர கூடாது. அவைக்கு முன் வந்து அமளி செய்ய கூடாது.அப்படி செய்தால் அந்த எம்பிக்கள் இந்த கூட்டத்தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தார். ஆனால் இன்றும் டெல்லி கலவரம் தொடர்பாக திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டனர்.
காங்கிரஸ் எம்பிக்கள் இன்று அவை முன் வந்து அமளியில் ஈடுப்பட்டனர். சபாநாயகர் ஓம் பிர்லா இதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் எம்பிக்கள் விடாமல் முன்னே வந்து கோஷமிட்டனர். இதையடுத்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 எம்பிக்களை இந்த கூட்டத்தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார் .
அதன்படி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுரவ் கோகாய், என் பிரதான், டீன் குறிகோஸ், ஆர் உன்னிதன், மாணிக்கம் தாக்கூர், பென்னி பெனான், குர்ஜீத் சிங் ஆகியோர் சபாநாயகர் மூலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுக்க அவர்கள் 7 பேரும் கலந்து கொள்ள முடியாது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications