மருத்துவத்திற்கு மக்கள் அதிகம் செலவிடுவதை தடுக்க வேண்டும்.. பொருளாதார ஆய்வறிக்கை
டெல்லி: பொருளாதார கணக்கெடுப்பு 2020-21 சுகாதாரத் துறையின் நீண்டகால நோக்கங்கள் குறித்து பேசியுள்ளது. மருத்துவ செலவீனங்களை குறைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையில் பொதுச் செலவினங்களை 2.5-3 சதவீதமாக உயர்த்துவதன் மூலம், மக்களின் மருத்துவ செலவினங்களை (ஓஓபிஇ) தற்போதைய 65 சதவீதம் என்ற மட்டத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்கலாம் என்று கூறியுள்ளது.
அதிக தனிநபர் செலவினங்களைக் கொண்ட மாநிலங்களில் வசிக்கும் மக்களின் மருத்துவ செலவீனங்கள் குறைவாக உள்ளன.

மொத்த உற்பத்தியில் மருத்துவ சேவை
எனவே முன்னேறிய மாநிலங்கள் சுகாதார செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திலிருந்து, 2.5-3 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பொது செலவீனத்தை கூட்ட வேண்டும்
"பொதுச் செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திலிருந்து 2.5-3 சதவீதமாக அதிகரிப்பது ஒட்டுமொத்த சுகாதார செலவினங்களை 65 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்கக்கூடும்" என்று பொருளாதார கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.

பாக்கெட்டிலிருந்து செலவு
ஓஓபிஇ என்பது ஒரு நோயாளி நேரடியாக செலுத்தும் செலவு ஆகும். சுகாதார சேவையின் முழு செலவையும் காப்பீடு ஈடுசெய்யாமல் போனால் மக்கள் கைகளில் இருந்து அதிக பணத்தை செலவிட வேண்டியிருக்கும்.

மருத்துவ செலவை குறைக்க வேண்டும்
முன்னேறிய மாநிலங்கள் தற்போது தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்த பகுதியை சுகாதாரத்துக்காக செலவிடுகின்றன. உலகில் ஓஓபிஇ அதிகமான விகிதம் கொண்ட நாடுகளில் இந்தியாவும் உள்ளது. மக்களிடம் மருத்துவ செலவை குறைக்க வேண்டும். அப்போதுதான் நாடு வளம் பெறும் என்று பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. எனவே பட்ஜெட்டில், இதற்கு ஏற்ற திட்டங்கள் அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications