விவசாயிகள் தற்கொலை.. என் உடலை போராட்ட கள எல்லையிலேயே புதைத்து விடுங்கள்.. கடிதத்தில் உருக்கம்
டெல்லி: டெல்லி- காஸியாப்பூர் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டம் 38 நாளை எட்டிய நிலையில் இதுவரை 6 கட்டங்களாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் போராடி வருகிறார்கள். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவும் எட்டப்படவில்லை. 3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படவில்லை என்பதால் விரக்தியில் இதுவரை 6 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.

போராட்டக் களம்
இந்த நிலையில் நேற்றைய தினம் டெல்லி- காஸியாபூர் எல்லையில் போராட்டக் களத்தில் இருந்த விவசாயி காஷ்மீர் சிங். இவர் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்தவர். இவர் போராட்ட களத்தில் உள்ள நடமாடும் கழிவறைக்குச் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை.

நீண்ட நேரம்
கழிப்பறை கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததை அடுத்து விவசாயிகள் பதற்றமடைந்தனர். பின்னர் போலீஸார் வரவழைத்து கதவு உடைக்கப்பட்டது. அப்போது நைலான் கயிற்றில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தது தெரியவந்தது.

தற்கொலை கடிதம்
இதையடுத்து அவரது உடல் இறக்கப்பட்டது. அப்போது அவரது பாக்கெட்டில் தற்கொலை கடிதம் இருந்தது. அதில் எனது இறப்பு வீணாக செல்லக் கூடாது. எனது உடலை டெல்லி- உத்தரப்பிரதேச எல்லையில்தான் புதைக்க வேண்டும் என உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார்.

சோகமயம்
வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி விவசாயிகள் சார்பில் நாளை மறுநாள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதில் சுமூக முடிவுகள் எட்டப்படுமா என விவசாயிகள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளார்கள். விவசாயிகள் தற்கொலையால் அந்த பகுதியே சோக மயமாக காட்சியளிக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications