விவசாயிகள் தற்கொலை.. என் உடலை போராட்ட கள எல்லையிலேயே புதைத்து விடுங்கள்.. கடிதத்தில் உருக்கம்
டெல்லி: டெல்லி- காஸியாப்பூர் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டம் 38 நாளை எட்டிய நிலையில் இதுவரை 6 கட்டங்களாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் போராடி வருகிறார்கள். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவும் எட்டப்படவில்லை. 3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படவில்லை என்பதால் விரக்தியில் இதுவரை 6 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.

போராட்டக் களம்
இந்த நிலையில் நேற்றைய தினம் டெல்லி- காஸியாபூர் எல்லையில் போராட்டக் களத்தில் இருந்த விவசாயி காஷ்மீர் சிங். இவர் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்தவர். இவர் போராட்ட களத்தில் உள்ள நடமாடும் கழிவறைக்குச் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை.

நீண்ட நேரம்
கழிப்பறை கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததை அடுத்து விவசாயிகள் பதற்றமடைந்தனர். பின்னர் போலீஸார் வரவழைத்து கதவு உடைக்கப்பட்டது. அப்போது நைலான் கயிற்றில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தது தெரியவந்தது.

தற்கொலை கடிதம்
இதையடுத்து அவரது உடல் இறக்கப்பட்டது. அப்போது அவரது பாக்கெட்டில் தற்கொலை கடிதம் இருந்தது. அதில் எனது இறப்பு வீணாக செல்லக் கூடாது. எனது உடலை டெல்லி- உத்தரப்பிரதேச எல்லையில்தான் புதைக்க வேண்டும் என உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார்.

சோகமயம்
வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி விவசாயிகள் சார்பில் நாளை மறுநாள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதில் சுமூக முடிவுகள் எட்டப்படுமா என விவசாயிகள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளார்கள். விவசாயிகள் தற்கொலையால் அந்த பகுதியே சோக மயமாக காட்சியளிக்கிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications