அம்பேத்கர் விரும்பியதை நிறைவேற்றிய மோடி! இளையராஜாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஹண்டே! பரபர அறிக்கை இதோ..!
டெல்லி : அம்பேத்கருடன் பிரதமர் நரேந்திர மோடியை இசையமைப்பாளர் இளையராஜா ஒப்பிட்டு எழுதிய அணிந்துரை சர்ச்சையான நிலையில், அம்பேத்கர் விரும்பியதை 70 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றி காட்டியவர் பிரதமர் மோடி எனவும், இளையராஜாவுக்கு ஆதரவாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் மோடியின் ஆட்சியை பார்த்தால் அம்பேத்கரே பெருமைப்படுவார் எனக் கூறியிருந்தார்.
தமிழகம் முழுவதும் இளையராஜாவின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்தது. அதே நேரத்தில் தனது கருத்துக்களை திரும்பப் பெற முடியாது எனவும் இளையராஜா அவரது தம்பி கங்கை அமரன் கூறியதாக தகவல் வெளியானது.

இசையமைப்பாளர் இளையராஜா
ஆனாலும், அவரது கருத்து அவ்வளவு சீக்கியம் ஓயவில்லை, பல அரசியல் தலைவர்கள் அதனை மையமாக வைத்து கருத்து தெரிவிக்க அது மீண்டும் மீண்டும் சர்ச்சையாகி வருகிறது. அவருக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டுமெனவும், அதற்காக கடிதம் எழுதவும் தயார் எனக் கூறியிருந்தார்.

இளையராஜாவுக்கு ஆதரவு
இது நடந்து பல நாட்கள் ஆகியுள்ள நிலையில், அம்பேத்கர் விரும்பியதை 70 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றி காட்டியவர் பிரதமர் மோடி எனவும், இளையராஜாவுக்கு ஆதரவாகவும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," இசைஞானி திரு. இளையராஜா அவர்கள் அண்ணல் Dr.அம்பேத்கர் அவர்களுடன் பாரத பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களை ஒப்பிட்டு பேசியதில் எந்த தவறும் இல்லை. 1949-ல் காஷ்மீர் மாநிலத்திற்கு 370வது சாசனத்தின் மூலம் தனி அந்தஸ்து கொடுப்பதற்காக. திரு ஷேக் அப்பூல்லா அரசியல் சாசன வரைவுக் குழுத்தலைவர் Dr.அம்பேத்கர் அவர்களை அணுகினார்.

டாக்டர் அம்பேத்கர்
இச்செயலைக் கண்டித்து, Dr.அம்பேத்கர் அவர்கள் ஷேக் அப்துல்லா அவர்களிடத்தில் "பிரதமர் பண்டித நேரு அவர்களுக்கு நீங்கள தவறான போசனைகளை கூறிக் கொண்டு வருகிறீர்கள். காஷ்மிருக்கு தனி அந்தஸ்து கொடுப்பதன் மூலமாக அந்த மாநிலத்தில் எந்த தொழிற்சாலைகளும் வராது வேலை வாய்ப்புகள் அறவே நீங்கி விடும். இதனால் மக்களின் வாழ்க்கை பாழாகி விடும். இந்திய நாட்டின் சட்ட அமைச்சராக இருக்கின்ற நான், 30-வது சரத்தை அரசியல் சாசனத்தில் புகுத்துகின்ற தேசதுரோக செய்லுக்கு உடந்தையாக இருக் மாட்டேன் என திட்டவட்டமாக கூறினார்.
Recommended Video

திடீர் ஆதரவு
பிறகு, வேறு வழியில்லாமல், 17.04.1949 அன்று, இந்த சாசன பிரிவை திரு. N.G.அப்பங்காரால் சாசன சபையில் நிறைவேற்றப்பட்டது. ஆகவே 1949ஆம் ஆண்டில் Dr.அம்பேத்கர் அவர்கள் விரும்பியதை 70 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய பாரத பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றினார். இது தான் வரலாறு. இன்றைய காங்கிரஸ்காரர்களுக்கு அம்பேத்கர் அவர்களை கொண்டாடுவதில் எந்த உரிமையும் தகுதியுமில்லை. மும்பை மாகாணத்தில் இருந்து சாசன சபைக்குள் அம்பேத்கர் அவர்களை வரவிடாமல் தடுத்தது அன்றைய காங்கிரஸ் தலைவர் பண்டிதர் நேரு அவர்களும், மும்பை மாகாணத்தின் முதல்வர் BG கேர் அவர்களும் தான் பிறகு டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கிழக்கு வங்காளத்தின் ஜோகேந்திர மண்டல் அவளுடைய உதவியால்தான் சாசன சபை வர முடிந்தது" என கூறியுள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications