இலவசங்கள் தொடர்பாக மத்திய அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டக் கூடாது? : உச்சநீதிமன்றம்
டெல்லி: அரசியல் கட்சிகள் இலவசங்கள் தொடர்பாக வாக்குறுதிகள் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஏன் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டக் கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரசியல் கட்சிகளின் இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பாஜகவின் அஸ்வினி உபாத்யாய் பொதுநலன் வழக்கைத் தொடர்ந்தார். இவ்வழக்கில் தொடர்ச்சியாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வழக்கில் ஆம் ஆத்மி, திமுகவும் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன.

இலவசங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா கோலி, சிடி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரித்தது. அப்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தேர்தல் கால இலவச வாக்குறுதிகள் நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிடும். இதைத் தடுக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும். அரசியல் கட்சிகள்தான் இத்தகைய வாக்குறுதிகளை அளித்தும் வருகின்றன.
இலவசங்கள் குறித்த வாக்குறுதிகள் என்பது மிக முக்கியமான பிரச்சனை. இது தொடர்பாக விவாதிக்க வேண்டியதும் அவசியம். இதனைத் தடுப்பது தொடர்பாக மத்திய அரசு ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டக் கூடாது? என்றார். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இலவசங்களை அனைத்து அரசியல் கட்சிகளும்தான் அறிவிக்கின்றன. அப்படி அறிவிப்பதை உரிமையாகவும் கருதுகின்றன என்றார்.
இந்த விசாரணையின் போது மனுதாரர் அஸ்வினி பாத்யாய் தரப்பு வழக்கறிஞர் விகாஸ் சிங் கூறுகையில், இலவசங்கள் தொடர்பாக ஆராய ஒரு குழுவை அமைக்கலாம் எனில் ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவை நியமிக்கலாம் என்றார். ஆனால் அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா, பணியில் இருந்து ஓய்வு பெறுபவர் அல்லது ஓய்வு பெற இருப்பவருக்கு இங்கே மரியாதை இல்லை என்றார்.
இந்த வழக்கில் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பாக ஆஜரான பிரசாந்த் பூஷண், இலவசங்களுக்கு எதிராக வாதிட்டார். அப்போது, இலவசங்கள் விவகாரத்தில் 3 விஷயங்களுக்கு தடை விதிக்கலாம். அதாவது அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் வாக்குறுதிகளை வழங்குவதற்கு தடை விதிக்கலாம். தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்னர் தருகிற வாக்குறுதிகளுக்கு தடை விதிக்கலாம். பொதுவான கொள்கைகளுக்கு எதிரான வாக்குறுதிகளுக்கும் தடை விதிக்கலாம் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications