ஆபத்து.. சர்ர்ரென விண்ணில் பாய்ந்த இந்திய ஜெட்கள்! ஃபாலோ பண்ணுங்க.. நடுவானில் திக் திக் சம்பவம்!
டெல்லி: நேற்று ஈரானில் இருந்து சீனா நோக்கி சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இந்திய விமானப்படை அதை எப்படி கையாண்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று காலை ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து அந்த விமானம் சீனாவின் குகான்சூ நோக்கி சென்று கொண்டு இருந்தது. IRM081 விமானம் ஆகும் இது. காலை 9.10 மணிக்கு அந்த விமானம் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தது.
இந்திய வான் எல்லைக்குள் நுழைந்து 10 நிமிடம் ஆன பின் விமானத்தில் இருந்து டெல்லி விமான கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தகவல் சென்றுள்ளது. அதில்.. எங்கள் விமானத்தில் குண்டு இருப்பதாக மிரட்டல் வந்துள்ளது.
நாங்கள் அவசரமாக தரையிறங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கை
இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதும் முறைப்படி.. உடனே இந்திய விமானப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 300 பயணிகள் வரை இருந்துள்ளனர். இது ஏர்பஸ் 320 விமானம் ஆகும். விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் உடனே தரையிறங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து டெல்லி விமான நிலைய அதிகாரிகளும் டெல்லியில் விமானத்தை தரையிறக்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இது மற்ற எமர்ஜென்சி லேண்டிங் போல கிடையாது. விமானம் தரையிறங்க சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

மிரட்டல்
அதாவது ஓடுதளத்தை தயார் செய்து மற்ற விமானங்கள் அனைத்தையும் தூரமான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதோடு விமான நிலையத்தில் இருந்து தேவைப்பட்டால் மக்களை வெளியேற்ற வேண்டும். தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். வெடிகுண்டு நிபுணர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை வேகமாக செய்து வந்துள்ளனர். ஆனால் இந்த ஏற்பாடுகளை செய்யும் முன் விமானம் டெல்லி விமான நிலையத்திற்கு மேலே வந்துவிட்டது.

தயார் நிலை
இதனால் தொழில்நுட்ப ரீதியாக பிஸியான டெல்லி விமான நிலையத்தில் ஏற்பாடுகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தை டெல்லியில் இறக்க வேண்டாம் என்று தகவல் சென்றுள்ளது. இந்திய விமானப்படை சார்பாக தெரிவிக்கப்பட்ட தகவலில் விமானத்தை ஜெய்ப்பூர் நோக்கி கொண்டு செல்லுங்கள். அல்லது சண்டிகர் விமான நிலையத்தில் தரையிறக்குங்கள் என்று கூறி உள்ளனர். அதோடு உடனே இந்திய விமானப்படை விமானங்களும் வானில் சீறிப்பாய்ந்து உள்ளன.

தயார் நிலை
அந்த குறிப்பிட்ட விமானத்தை குறிப்பிட்ட இடைவெளியில் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். வெடிகுண்டு இருப்பதாக கருதப்படும் ஒரு விமானம் திடீரென எங்காவது போய் மோதினால் பெரிய சிக்கல் ஆகும். இதனால் பாதுகாப்பிற்காக இந்திய விமானப்படை ஜெட்கள் பின்னாடியே பாலோ செய்து சென்றுள்ளன. இந்தியாவின் சுகோய் ரக விமானமான, Su-30 MKI விமானத்தை இந்திய விமானப்படை அனுப்பி உள்ளது. இப்படி இந்திய ஜெட்கள் பின்னாடியே சென்ற நிலையில், விமானிகள், விமானத்தை சீனாவிற்கே கொண்டு செல்வதாக கடைசியில் தெரிவித்தனர்.

சுகோய்
ஜெய்ப்பூர், சண்டிகருக்கு செல்ல வாய்ப்பு இல்லை. அதனால் பெய்ஜிங்கிலேயே தரையிறங்கி விடுகிறோம் என்று தெரிவித்து உள்ளனர். இதனால் விமானம் இந்திய வான் எல்லையில் இருந்து அடுத்த சில நிமிடங்களில் வெளியேறியது. சீனா வான் எல்லைக்குள் நுழைந்த பின்பே விமானத்தில் பாம் இல்லை என்பது தெரிய வந்தது. பாம் இருப்பதாக வந்த புகார் பொய்யானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் பெய்ஜிங்கில் தரையிறங்கியது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்! -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு












Click it and Unblock the Notifications