Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏறுது.. இறங்குது.. இந்தியாவில் இன்று சற்று குறைந்த கொரோனா பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 20,044 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா பாதிப்பை உறுதி செய்யும் சதவீதம் 4.80 என்ற அளவில் உள்ளது.

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டின் துவக்கத்தில் கொரோனா பரவ துவங்கியது. அதன்பிறகு ஊரடங்கு அமலானது. தற்போது வரை கொரோனா 3 அலைகளாக பொதுமக்களை தாக்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில காலமாக குறைந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவ துவங்கி உள்ளது.

 மத்திய அரசு விபரம்

மத்திய அரசு விபரம்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அனைத்து மாநில கொரோனா பாதிப்பு குறித்து மத்திய அரசின் சுகாதாரத்துறை தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய விபரங்கள் வருமாறு:

நேற்றை விட குறைவு

நேற்றை விட குறைவு

அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் மொத்தம் 20,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பை உறுதி செய்யும் சதவீதம் என்பது 4.80 என்ற அளவில் உள்ளது. நேற்று 20,139 பேருக்கு நோய் தொற்று உறுதியான நிலையில் இது சற்று குறைந்துள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் 16,906 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர். இதை ஒப்பிடும்போது இன்றைய பாதிப்பு அதிகமாகும். மேலும் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனாவில் இருந்து 18,301 பேர் குணமாகி உள்ளனர். அதேநேரத்தில் 56 பேர் பலியாகி உள்ளனர்.

மொத்த பாதிப்பு எவ்வளவு?

மொத்த பாதிப்பு எவ்வளவு?

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 1, 40, 760 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். வீட்டு தனிமையில் உள்ளவர்களும் இதில் அடங்குவர். மேலும் மொத்தம் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 7 ஆயிரத்து 033 ஆக உள்ளது. இதில் 4 கோடியே 30 லட்சத்து 63 ஆயிரத்து 651 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 5 லட்சத்து 25 ஆயிரத்து 660 பேர் பலியாகி உள்ளனர்.

தடுப்பூசி தான் ஆயுதம்

தடுப்பூசி தான் ஆயுதம்

இந்தியாவில் தற்போது கொரோனா மரபணு மாறி பரவி வருகிறது. இதுதான் சமீபத்திய கொரோனா பரவலுக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள தடுப்பூசி தான் சிறந்த ஆயுதமாக மத்திய அரசு, மாநில அரசு கூறி வருகிறது. ஏற்கனவே 2 டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வரும் நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செப்டம்பர் மாதம் 28 ம் தேதி வரை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனை, முகாம்களில் இலவசமாக போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+