ஏறுது.. இறங்குது.. இந்தியாவில் இன்று சற்று குறைந்த கொரோனா பாதிப்பு
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 20,044 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா பாதிப்பை உறுதி செய்யும் சதவீதம் 4.80 என்ற அளவில் உள்ளது.
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டின் துவக்கத்தில் கொரோனா பரவ துவங்கியது. அதன்பிறகு ஊரடங்கு அமலானது. தற்போது வரை கொரோனா 3 அலைகளாக பொதுமக்களை தாக்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில காலமாக குறைந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவ துவங்கி உள்ளது.

மத்திய அரசு விபரம்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அனைத்து மாநில கொரோனா பாதிப்பு குறித்து மத்திய அரசின் சுகாதாரத்துறை தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய விபரங்கள் வருமாறு:

நேற்றை விட குறைவு
அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் மொத்தம் 20,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பை உறுதி செய்யும் சதவீதம் என்பது 4.80 என்ற அளவில் உள்ளது. நேற்று 20,139 பேருக்கு நோய் தொற்று உறுதியான நிலையில் இது சற்று குறைந்துள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் 16,906 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர். இதை ஒப்பிடும்போது இன்றைய பாதிப்பு அதிகமாகும். மேலும் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனாவில் இருந்து 18,301 பேர் குணமாகி உள்ளனர். அதேநேரத்தில் 56 பேர் பலியாகி உள்ளனர்.

மொத்த பாதிப்பு எவ்வளவு?
தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 1, 40, 760 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். வீட்டு தனிமையில் உள்ளவர்களும் இதில் அடங்குவர். மேலும் மொத்தம் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 7 ஆயிரத்து 033 ஆக உள்ளது. இதில் 4 கோடியே 30 லட்சத்து 63 ஆயிரத்து 651 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 5 லட்சத்து 25 ஆயிரத்து 660 பேர் பலியாகி உள்ளனர்.

தடுப்பூசி தான் ஆயுதம்
இந்தியாவில் தற்போது கொரோனா மரபணு மாறி பரவி வருகிறது. இதுதான் சமீபத்திய கொரோனா பரவலுக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள தடுப்பூசி தான் சிறந்த ஆயுதமாக மத்திய அரசு, மாநில அரசு கூறி வருகிறது. ஏற்கனவே 2 டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வரும் நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செப்டம்பர் மாதம் 28 ம் தேதி வரை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனை, முகாம்களில் இலவசமாக போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications