உக்ரைன் பேரழிவுக்கு ரஷ்யாவே பொறுப்பு.. இந்திய ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டில்.. ஸ்காட் மாரிசன் பேச்சு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கும் இடையே இன்று 2அவது நாளாக மெய்நிகர் உச்சி மாநாடு நடைபெற்றது.
இந்தியா ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் புதிய முயற்சிகளுக்கான திட்டத்தை வகுக்க திங்கள்கிழமை இரண்டாவது இந்தியா-ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சி மாநாடு தொடங்கியது.

இந்த உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் வர்த்தகம், கனிம வளம், இடம்பெயர்வு, கல்வி ஆகியவை குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர்.
இந்தியாவில் ஆஸ்திரேலியா அரசின் மிகப்பெரிய வர்த்தக உடன்படிக்கையாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் காலத்தில் பல்வேறு துறைகளில் ஆஸ்திரேலியா ரூ.1,500 கோடி முதலீடுகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கும் இடையே இன்று 2ஆவது நாளாக மெய் நிகர் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்தோ பசிபிக் விவகாரம் தொடர்பாகவும் உக்ரைன் போர் தொடர்பாகவும் ஸ்காட் மாரிசன் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆஸ்திரேலியா பகுதியில் தொடர்ந்து மாறும் சர்வதேச சூழல் குறித்தும் அதைச் சமாளிக்க எடுக்கும் நடவடிக்கை குறித்தும் மாரிசன் குறிப்பிட்டார்.
உக்ரைன் நிலைமை குறித்துப் பேசிய மாரிசன், "உக்ரைன் நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள பேரழிவுக்கு ரஷ்யா தான் பொறுப்பு ஏற்க வேண்டும். குவாட் உச்சி மாநாடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத போர் குறித்து விவாதிக்க வாய்ப்பளித்தது. அதேபோல இந்தோ-பசிபிக் மீதான நிகழ்வுகள் குறித்து விவாதிக்க இந்த சந்திப்பு வாய்ப்பு அளித்துள்ளது" என்றார்.
இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "கடந்த மெய்நிகர் உச்சி மாநாடு என்பது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான உறவை வடிவமைக்க உதவியது. எனவே, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை முன்னோக்கி நகர்த்த இந்தச் சந்திப்பு உதவும் என நம்புகிறேன்.
Recommended Video
வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு , கல்வி மற்றும் புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளோம் என்பதைப் பெருமையாகச் சொல்லலாம்" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications