சர்வதேச விமான சேவைக்கான தடை பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு.. மத்திய அரசு உத்தரவு..!
சர்வதேச விமான போக்குவரத்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது
டெல்லி: நாளுக்கு நாள் தொற்று உயர்ந்து வரும் நிலையில், நாடு முழுவதும் பிப்ரவரி 28-ம் தேதி வரை சர்வதேச விமான போக்குவரத்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.. இதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
உலகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.. இதை ஒருவழியாக சமாளித்து வரும்போது, அதற்குள் கொரோனா வைரஸின் ஒமைக்ரான் மாறுபாடு பாதிப்புகளை ஏற்படுத்த துவங்கி விட்டது.. இது உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

பல்வேறு நாடுகளிலும் ஒமிக்ரான் தாக்கம் உள்ளதால், விமான சேவையை முற்றிலும் நிறுத்திவிட்டன.. கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த வருடமே மார்ச் 23-ந் தேதி முதல் உள்நாட்டு, சர்வதேச பயணிகள் விமான சேவைகள் தடை செய்யப்பட்டன..
அதன்பிறகு தொற்றை நீக்க அந்தந்த அரசுகள் மிக தீவிரமான நடவடிக்கையை மேற்கொண்டன.. பிறகு, தொற்றின் தாக்கம் சற்று தணிந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியது. ஆனால், வழக்கமான சர்வதேச விமான சேவை மட்டும் இன்னும் தொடங்கப்படவில்லை... சூழ்நிலைகளுக்கு ஏற்ப விமான சேவை தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது..
கடந்த மாதம் ஒரு அறிவிப்பு வெளியானது.. அதன்படி, ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் 15 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட சர்வதேச விமானங்கள் சேவை தொடங்கப்படாது என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.. இது தொடர்பாக வெளியாகியிருந்த அந்த அறிவிப்பில், சர்வதேச பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான சரியான தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்" என்றும் கூறியிருந்தது.
அந்த வகையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்ட விமானங்களுக்கு மட்டும் தடை இல்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது... இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் கூறியுள்ளது. இந்திய அரசு அனுமதிக்கும் நாடுகளிலிருந்து மட்டும் விமான சேவை நடைபெறும் என்று சிவில் விமானப் போக்குவரத்து கூறியுள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications