சர்வதேச விமான சேவைக்கான தடை பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு.. மத்திய அரசு உத்தரவு..!
சர்வதேச விமான போக்குவரத்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது
டெல்லி: நாளுக்கு நாள் தொற்று உயர்ந்து வரும் நிலையில், நாடு முழுவதும் பிப்ரவரி 28-ம் தேதி வரை சர்வதேச விமான போக்குவரத்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.. இதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
உலகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.. இதை ஒருவழியாக சமாளித்து வரும்போது, அதற்குள் கொரோனா வைரஸின் ஒமைக்ரான் மாறுபாடு பாதிப்புகளை ஏற்படுத்த துவங்கி விட்டது.. இது உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

பல்வேறு நாடுகளிலும் ஒமிக்ரான் தாக்கம் உள்ளதால், விமான சேவையை முற்றிலும் நிறுத்திவிட்டன.. கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த வருடமே மார்ச் 23-ந் தேதி முதல் உள்நாட்டு, சர்வதேச பயணிகள் விமான சேவைகள் தடை செய்யப்பட்டன..
அதன்பிறகு தொற்றை நீக்க அந்தந்த அரசுகள் மிக தீவிரமான நடவடிக்கையை மேற்கொண்டன.. பிறகு, தொற்றின் தாக்கம் சற்று தணிந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியது. ஆனால், வழக்கமான சர்வதேச விமான சேவை மட்டும் இன்னும் தொடங்கப்படவில்லை... சூழ்நிலைகளுக்கு ஏற்ப விமான சேவை தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது..
கடந்த மாதம் ஒரு அறிவிப்பு வெளியானது.. அதன்படி, ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் 15 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட சர்வதேச விமானங்கள் சேவை தொடங்கப்படாது என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.. இது தொடர்பாக வெளியாகியிருந்த அந்த அறிவிப்பில், சர்வதேச பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான சரியான தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்" என்றும் கூறியிருந்தது.
அந்த வகையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்ட விமானங்களுக்கு மட்டும் தடை இல்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது... இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் கூறியுள்ளது. இந்திய அரசு அனுமதிக்கும் நாடுகளிலிருந்து மட்டும் விமான சேவை நடைபெறும் என்று சிவில் விமானப் போக்குவரத்து கூறியுள்ளது.
-
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம்












Click it and Unblock the Notifications