நம்ம இலக்கு இனி இதுதான்.. வளர்ந்த நாடுகளுடன் போட்டிக்கு தயாராகனும்'.. பிரதமர் மோடி அதிரடி!
டெல்லி: 5வது பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது என்றும் 'வளர்ந்த நாடுகளுடன் போட்டியிட தயாராகனும்' என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சரக்குகளை தங்கு தடையின்றி கொண்டு செல்ல வழிவகுக்கும் புதிய தேசிய சரக்கு கொள்கையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

வளர்ந்த நாடுகளுடன் போட்டி
இந்தியா உற்பத்தி மையமாக உருவெடுத்து வருகிறது. கொள்கைகள் என்பது வெறும் தொடக்கம் தான். கொள்கை.. பிளஸ்.. செயல்திறன் இந்த இரண்டும் வளர்ச்சிக்கு சரிசமமானது. நாம் வளரும் போது மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளுடன் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதை நாம் வரவேற்க வேண்டும். வளர்ந்த நாடுகளிடம் இருந்து வரும் போட்டியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

நவீன போக்குவரத்து வசதிகள்
இந்தியாவுக்கு இடர்பாடாக இருந்த மெதுவான நகர்வில் இருந்து மீண்டு சரக்குகளை அனைத்து வழிகளிலும் வேகமாக கொண்டு செல்வதே இந்த புதிய கொள்கையின் நோக்கம் ஆகும். லாஜிஸ்டிக்ஸ் துறையை வலுப்படுத்த தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். நவீன போக்குவரத்து வசதிகள் மூலம் இந்திய பொருள்கள் சர்வதேச சந்தைகளை எளிதாக அடையும். தொலைதூர பகுதிகளுக்கும் சரக்குகளை கொண்டு செல்வதில் உள்ள சிக்கல்களை இந்த புதிய சரக்கு கொள்கைகள் போக்கும். ஒருங்கிணைந்த லாஜிஸ்டிக்ஸ்

நடைமுறைகள் எளிதாக்கப்படும்
போக்குவரத்து துறை தொடர்பான அனைத்து டிஜிட்டல் சேவைகளையும் ULIP என்ற ஒரே தளத்தில் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் ஏற்றுமதி தொடர்புடைய சிக்கலான நடைமுறைகள் எளிதாக்கப்படும். வணிக துறையிலும் இ-வே ரசீதிகளை செலுத்த வேண்டிய இடங்களில் தொலைத்தொடர்பு ஆய்வு முறை கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ரசீதுகளை ஆய்வு செய்ய வாடிக்கையாளர்கள் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. சுங்கக்கட்டணத்தை செலுத்த கொண்டு வரப்பட்டு இருக்கும் பாஸ்டேக் முறையின் மூலம் போக்குவரத்து துறையின் திறன் அதிகரித்துள்ளது.

வலிமை மிக்க ஜனநாயக நாடு
'வலிமை மிக்க ஜனநாயக நாடாக இந்தியா உருவாகி வருகிறது' என உலகளாவிய நிபுணர்கள் சொல்கிறார்கள். இந்திய நாட்டின் உறுதியையும், படிப்படியான முன்னேற்றத்தினையும் அவர்கள் பாராட்டுகின்றனர். தற்போது இந்தியா உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. உற்பத்தி மையமாக இந்தியா மாறியுள்ளது. உள்நாட்டு உற்பத்தியினை பெருக்குவதற்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை முறை அறிவிக்கப்பட்டுள்ளதையும் உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
-
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications