திடீரென அதிகரிக்கும் கொரோனா! இந்தியாவில் 4வது அலை சாத்தியமா? மாநிலங்களுக்கு பறந்த முக்கிய வார்னிங்!
டெல்லி : இந்தியாவில் ஜூன் மாதம் கொரோனா நான்காவது அலை தொடங்க வாய்ப்புள்ளதாக கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் பல மாதங்களுக்கு முன்னரே தெரிவித்த நிலையில், தற்போது டெல்லி, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மருத்துவ நிபுணர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் சரிவில் இருந்து கொரோனா 3வது அலையில் பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் மும்பை போன்ற நகரங்களில் சிறிது சிறிதாக பாதிப்பு அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தெலுங்கானா, மகராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக முதன்மை செயலாளர்களுக்கு மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு
நாடு முழுவதும் தற்போது கொரோனா சிறிது சிறிதாக அதிகரித்து வரும் சூழலில், ஜூன் 22ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 24ஆம் தேதி வரை கொரோனா நான்காவது அலை பரவ வாய்ப்புள்ளதாக கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கடந்த பிபரவரி மாதமே தெரிவித்துள்ளனர். புதிய வகை கொரோனா மற்றும் தடுப்பூசி போட்டதன் விகிதம் உள்ளிட்டவை அடிப்படையிலேயே கொரோனா நான்காவது அலையின் தீவிரம் இருக்கும் எனவும் அவர்கள்குறிப்பிட்டிருந்தனர்.

கொரோனா 4வது அலை
குறிப்பாக ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை, கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கான்பூர் ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் மூன்றாவது முறையாக, கொரோனா அலையின் பாதிப்பை கணித்த நிலையில், கடந்த இரு ஆண்டுகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலையின் போது இவர்களின் கணிப்பு கிட்டத்தட்ட சரியாக இருந்தது.

திடீரென அதிகரிப்பு
இந்நிலையில் கான்பூர் ஐஐடியின் கருத்தை பிரதிபலிக்கும் வகையிலேயே தற்போது கொரோனா பரவல் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இன்று 345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படாத நிலையில் தற்போது 1446 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிபுணர்கள் அச்சம்
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 4,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 745 ஆகவும், நேற்று 3 ஆயிரத்து 712 ஆகவும் இருந்தது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 68 ஆயிரத்து 585 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா பாரவலை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், 4வது அலை ஏற்படுமா என்ற அச்சம் ஏற்படுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications