துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் பதவியேற்பு.. பதவிப்பிரமாணம் செய்துவைத்த ஜனாதிபதி திரெளபதி முர்மு!
டெல்லி: நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பதவி ஏற்றுள்ளார்.
Recommended Video
அண்மையில் குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்றார். இதனைத்தொடர்ந்து புதிய குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தங்கர் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா போட்டியிட்டார்.

ஜெகதீப் தங்கர் வெற்றி
இந்தத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 725 பேர் வாக்களித்தனர். 92.94 சதவிகித வாக்குகள் பதிவாகின. அதில் பாஜக வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளையும், மார்க்கரெட் ஆல்வா 182 வாக்குகளையும் பெற்றனர். 15 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் ஜெகதீப் தன்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

வாழ்த்து
இதனைத்தொடர்ந்து நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்க உள்ள ஜெகதீப் தங்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் சேர்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்த வெங்கையா நாயுடுவின் பிரிவு உபசார விழா, விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இன்று பதவியேற்பு
இந்த நிலையில் நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்றுள்ளார். இவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

யார் இந்த ஜெகதீப் தங்கர்?
வழக்கறிஞர் ஜெகதீப் தங்கர் பாஜகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர். 1989ம் ஆண்டு முதல் முறையாக ஜுன்ஜுஹுனு லோக்சபாவுக்கு போட்டியிட்டு தேர்வானார். அப்போது பிரதமராக இருந்த சந்திரசேகர் தலைமையிலான அமைச்சரவையில் அவருக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இரு ஆண்டுகள் வரை மட்டும் அமைச்சராக இருந்த ஜெகதீப் தங்கர், 1993ம் ஆண்டு நடந்த ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.
பின்னர் கடந்த 2019ம் ஆண்டு மேற்கு வங்க மாநில ஆளுநராக ஜெகதீப் தன்கரை நியமித்து அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி - ஜெகதீப் தங்கர் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னர் கடந்த 2019ம் ஆண்டு மேற்கு வங்க மாநில ஆளுநராக ஜெகதீப் தன்கரை நியமித்து அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி - ஜெகதீப் தங்கர் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications