ஜேடியூவில் பிரசாந்த் கிஷோர் பற்ற வைத்த நெருப்பு- குடியுரிமை மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியுரிமை மசோதாவுக்கு ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) ஆதரவு தெரிவித்ததற்கு எதிராக அக்கட்சியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து லோக்சபாவில் ஜேடியூ வாக்களித்தது. இது கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கே எதிரானது அதன் தேசிய துணைத் தலைவரும் தேர்தல் வியூக வல்லுநருமான பிரசாந்த் கிஷோர் விமர்சித்திருந்தார்.

JDU General Secretary Pavan Verma also opposes to support to CAB

தற்போது ஜேடியூவில் பிரசாந்த் கிஷோர் கருத்துக்கு ஆதரவு வலுத்து வருகிறது. ஜேடியூ தேசிய பொதுச்செயலாளர் பவன் வர்மா இது குறித்து கூறியதாவது:

ராஜ்யசபாவில் குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரிக்கும் முடிவை கட்சித் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த மசோதா அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.

நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் பாரபட்சமான மசோதா. காந்தியின் கொள்கைகளை பின்பற்றும் நாம் இதனை நிச்சயம் ஏற்க முடியாது. மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு இம்மசோதா எதிரானது. இவ்வாறு பவன் வர்மா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+