பேராபத்துல இருக்காங்க.. காஷ்மீர் பண்டிட் மக்களை பாதுகாக்க வேண்டும்! கங்கணம் கட்டி களமிறங்கிய கங்கனா!
டெல்லி : தீவிரவாதிகள் அச்சுறுத்தல் மற்றும் தொடர் படுகொலைகளால் காஷ்மீரில் வசிக்கும் காஷ்மீரி பண்டிட் இன மக்கள் போராடி வரும் நிலையில், காஷ்மீர் பண்டிட் சமூக மக்களை நாம் காக்க வேண்டும் என பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் கடந்த 1990ஆம் ஆண்டுகளில் ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த போது அங்கு பாரம்பரியமாக வசித்து வந்த காஷ்மீர் பண்டிட் சமூகத்திற்கு எதிராக பெரும் வன்முறை தாக்குதலை காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகள் மேற்கொண்டனர்.
இந்திய வரலாற்றில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதை அடுத்து உயிர் பிழைப்பதற்காக அண்டை மாநிலங்களுக்கு தப்பிச்சென்று அகதிகளாக மாறினர்.

காஷ்மீர் பண்டிட்டுகள்
இந்திய வரலாற்றில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதையடுத்து உயிர் பிழைப்பதற்காக அண்டை மாநிலங்களுக்கு தப்பிச்சென்று அகதிகளாக மாறினர். இதனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தி காஷ்மீர் பயிற்சி படம் கூட தற்போது பெரிய அளவில் பேசப்பட்டது.

மீண்டும் குடியமர்த்தல்
இது ஒருபுறம் இருந்தாலும் ஜம்மு காஷ்மீரில் இருந்து புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் அவர்களது தாய் மண்ணில் குடியமர்த்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது அதன்படி ஆயிரக்கணக்கான காஷ்மீர் பண்டிட்டுகள் தற்போது மீண்டும் தங்களது தாய் மண்ணில் குடியேறி வருகின்றனர் அவர்களின் பாதுகாப்புக்காக குடியிருப்புகளில் பாதுகாப்பு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது

தீவிரவாதிகள் தாக்குதல்
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனால் காஷ்மீரில் மீண்டும் பண்டிட்டுகளுக்கு எதிரான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகத்துக்குள் நுழைந்து காஷ்மீர் பண்டிட் ஒருவரை 2 பயங்கரவாதிகள் சுட்டு கொன்ற பயங்கர சம்பவம் நடந்தது. இதேபோல் வங்கி மேலாளர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் காஷ்மீர் பண்டிட் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கங்கனா ரனாவத் ஆதரவு
இந்நிலையில் பண்டிட் சமூக மக்களை நாம் காக்க வேண்டும் என பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் கூறியுள்ளார். பிரபல செய்தி நிறுவனமான ஏஎன்ஐ-யின் செய்தி ஒன்றினை ரியாக்ட் செய்துள்ள கங்கபா, அந்த செய்தியை தனது சமூக வலைதள பக்கத்தில் ஸ்டோரியாக ஷேர் செய்துள்ளார். தற்போது மட்டுமல்ல காஷ்மீர் பண்டிட்களுக்கு ஆதரவாக கங்கனா தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications